Friday, 28 February 2014

''அமரா'' - திரை விமர்சனம்…!

கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார் நாயகன் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார். இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச்...

இலவச வைஃபை கிடைக்குதான்னு நாக்கை தொங்க போடுற ஆட்களுக்கு எச்சரிக்கை..!

வைஃபை வைரஸ் – சமாலியன்(Chameleon) – ஜாக்கிரதை..! இப்போதெல்லாம் எங்கு போனாலும் உடனே இலவச வைஃபை கிடைக்குதான்னு நாக்கை தொங்க போடுற ஆட்கள் மிக மிக அதிகமாகி விட்டார்கள். இதற்கிடையில் ந்ஏற்கனவே சொல்லிருக்கேன் அந்த மாதிரி பப்ளிக் வைஃபை ஸ்பாட்ஸ் உங்கள் தகவலை திருடும்னு – இப்ப அதையெல்லாம் தாண்டி வைஃபை வைரஸ் முதல் முதலா வந்திருக்கிறதை லிவர்பூல் பல்கலைகழகம் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த வைரஸ் பெயர் சமலியான் – Chameleon. இது எங்கு ஹாட் ஸ்பாட்ஸ் இருக்கோ...

''தெகிடி'' - விறுவிறுப்பான திரை விமர்சனம்…!

எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். இவரும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன க்ளையண்ட் யார்? என ஹீரோ துப்பறிவதே கதை. ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய...

நீ மட்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை கொழும்புல நடத்திப் பாறேன்..? : விஜய்டிவியை எச்சரித்த டைரக்டர்..!

நீ மட்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை கொழும்புல நடத்திப் பாறேன்..? : விஜய்டிவியை எச்சரித்த டைரக்டர்..! விஜய் டிவி நிறுவனம் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்த டைரக்டரும், தமிழீழ ஆதரவாளருமான கெளதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை.அந்த ரணமும்...

செல்வராகவனின் சிறு வயது குசும்புகள்..!

இளசுகளின் பல்ஸ் தெரிந்த இயக்குநர் செல்வராகவனின் டவுசர் காலம். ஆம்லேட்டைப் பிய்த்து அதில் சோற்றை உருட்டி வைத்துச் சாப்பிட்டிருப்பார். அடிக்கடி மழையில் ஆட்டம் போட்டு நனைந்து வந்து அப்பாவிடம் அடி வாங்கியிருப்பார். டயர் கொளுத்தி வட்டமாய் நின்று கேம்ப் ஃபயர் டான்ஸ் அப்போதே ஆடியிருப்பார். ஹிஸ்டரி சப்ஜெக்ட்டை விரும்பிப் படித்திருப்பார். ஆனால் ஆன்சர் ஷீட்டில் மட்டும் குழப்பி அடித்து ஹிஸ்டரி டீச்சருக்கு ஹிஸ்டீரியா வர வைத்திருப்பார்.   பாய்...

தமிழ் சினிமாவும் அமெரிக்க மாப்பிள்ளைகளும் - ஒரு பார்வை...!

தமிழ் சினிமாவில் தியாகம் செய்வதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்களின் பரிதாப மைண்ட் வாய்ஸ். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும் நாங்க மட்டும் கூடுவாஞ்சேரி ஹைவேயில் 'நீயா நானா’ கோபிநாத் மாதிரி கோட் சூட்லேயே திரியணுமுங்க. எல்லாப் படத்துலேயும் கிட்டத்தட்ட ரெண்டே கெட்டப்தான். ஃபுல் ஷேவ் பண்ணின, மாட்டுக்கு ஊசி போடுற டாக்டர் கெட்டப், இல்லைனா பிரெஞ்ச் பியர்டு வெச்ச சயின்டிஸ்ட் கெட்டப். இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமோ, முடிவு காலமோ...

தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்...புது பிரச்சனையை கிளப்பும் நயன்தாரா...!

புஸு புஸு நடிகையும், விரல் வித்தை நடிகரும் பிரிந்து செல்ல ஒரு வேளை அந்த டீல் தான் காரணமாக இருக்குமோ என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். விரல் வித்தை நடிகர் என்றைக்கு தனது முன்னாள் காதலியான நயன நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினாரோ அன்றைக்கே அவருக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அவர் யாருடன் நடித்தாலும் அது தொழில் அதை எல்லாம் தான் பெரிதுபடுத்த மாட்டேன் என்று புஸு புஸு நடிகை தெரிவித்திருந்தார்....

ரெட்லைட் ஏரியாவுக்கு ஈ.சி.ஆர் ரோடு தான் பெஸ்ட் : புதுமுக டைரக்டர் சொன்ன ‘பகீர்’ ஐடியா!

‘மதுரை சம்பவம்’ படத்தை டைரக்ட் செய்த யுரேகா அதன் பிறகு எந்தப் படத்தையும் டைரக்ட் செய்யவில்லை. பக்கா கமர்ஷியல் படமான இந்தப்படத்துக்குப் பிறகு அவரைத்தேடி பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதன்பிறகு எந்தப்படத்தையும் டைரக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார். இப்போது திடீரென்று பாலியல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை சொல்லும் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ என்ற டைட்டிலில் ஒரு படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார். சின்னத்திரை புகழ் சாண்ட்ரா எமி ஹீரோயினாக...

பாலா + சசிகுமார் = 'கரகாட்டம்’ - திரை விமர்சனம்

சசிகுமாரை ஹீரோவாக வைத்து பாலா எடுக்கப்போகும் அடுத்த படத்தோட டைட்டிலே 'கரகாட்டம்’னு கோலிவுட் பூரா பேச்சு சுத்தி அடிக்குது. காலில் சலங்கை இல்லாமலே கரகரனு ஆடுகிறவர் பாலா. கரகத்தையும் சேர்த்துக் கொடுத்தா என்னெல்லாம் பண்ணுவாரோ? வாங்க கரகாட்டம் கதை எப்படி இருக்கும்னு கொஞ்சம் கற்பனையில் ஓட்டிப் பார்ப்போம். சேந்தம்பட்டி கிராமத்திலேயே பெரிய ஆட்டக்காரரா இருந்தவர்தான் சண்முக சுந்தரம். அவருக்கு ஒரு அக்கா (அநேகமா இந்த ரோல்ல காலஞ்சென்ற காந்திமதி முகச் சாயலில்...

சோக கதையெல்லாம் என்கிட்ட சொல்லாதிங்க... அழுதுடுவேன்..!

இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது:– நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை. யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன். பிரச்சினைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு என் சப்போர்ட் இருக்கும். ஆனால் எந்த கட்சியோடும் சேர மாட்டேன். நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். நெஞ்சை நெகிழ வைக்கும் சோகமான கதைகள் கேட்டால் நான் அழுது விடுவேன்....

அஜீத்'வுடன் சிம்புவை நடிக்க விடமாட்டேன் - கௌதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை வரும் மார்ச் மாதம் 15ம் தேதி மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரும் என கௌதம் மேனன் உறுதியாக கூறிவருகிறார். சமீப காலமாக வந்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்த அஜீத்தை கௌதம் மேனன் முற்றிலும் மாற்றுவதற்கு தயாராகிவிட்டார். சுமார் 10 கிலோ...

விஜயை கன்னத்தில் அடித்த வில்லன் - முருகதாஸ் படக்குழுவினர் பரபரப்பு..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறையை உடைத்துக்கொண்டு வில்லன் டோட்டா வெளியே வருவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ராஜமுந்திரி சிறை போன்று செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் கதைப்படி சிறையில் இருந்து தப்பித்து செல்லும் அன்னிய நாட்டு உளவாளியை விஜய் எப்படி பிடிக்கிறார்...

பனிவிழும் மலர்வனம் - திரை விமர்சனம்..!

காதல்படம் என்கிற எண்ணத்தில் திரையரங்குக்குள் வருகிறவர்களை படம் தொடங்கி சிறிதுநேரம் வரைதான் நிறைவு செய்யமுடியும். அதன்பின்னர் படம் வேறுதிசையில் பயணிக்கிறது. புலிவரும்அடர்வனம் என்று பெயர் வைத்திருக்கலாம். முகநூல் மூலம் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கும் நாயகன் அபிலாஷ் நாயகி சானியதாரா ஆகிய இருவருக்கும் முகலாயர்காலத்திலிருந்து இருக்கும் பெற்றோர்எதிர்ப்பு வந்துவிடுகிறது.  நாயகனின் தந்தையாக நாசர் நடித்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவரைப்போலவே...

‘வல்லினம்’ - திரைவிமர்சனம்...!

நடிகர் : நகுல் நடிகை : மிருதுலா பாஸ்கர் இயக்குனர் : அறிவழகன் இசை : தமன் ஓளிப்பதிவு : பாஸ்கர் திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம். இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார்....

பிரித்விராஜ் கனவு நிறைவேறப்போகிறதாம்...!

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான மொழி திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடம் பெரும் அறிமுகத்தைப் பெற்ற நடிகர் பிரித்விராஜ் விரைவில் தான் அப்பாவாகப் போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மலையாள நடிகர் பிரித்விராஜ். மொழி, வெள்ளித்திரை, சத்தம் போடாதே முதலிய படங்களின் மூலம் நன்கு அறிமுகமானவர். ஆனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில தமிழ்ப் படங்கள் சரியாகப் போகதாலும், மலையாளத் திரைப்படங்களில்...

நிமிர்ந்து நில் சூப்பரா வந்திருக்கு - ஜெயம் ரவி, நிம்மதியா இருக்கு..!

இயக்குனர் சமுத்திரக் கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடித்திருக்கும் திரைப்படம் நிமிர்ந்து நில். கடந்த காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் பின்னர் பிப்ரவரி 28 ற்குத் தள்ளிவைக்கப்பட்டது. பிப்ரவரி 28லிருந்து இதன் வெளியீட்டுத் தேதி மார்ச் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 7ல் நிச்சயமாக இப்படம் வெளியாகும் என்று ஜெயம் ரவி உறுதி கூறியுள்ளார். வாசன் விசுவல் வென்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ் மற்றும்...

அவ்ளோ நல்லவரா சிம்பு? நயன்தாரா...!

இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல ஹன்ஷிகாவைப் பிரிந்து விட்டார் சிம்பு. கடந்த 14-ஆம் திகதி காதலர் தினத்தில் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் சிங்கிளாக இருக்கிறேன் என்று ஹன்ஷிகா வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலாக நானும் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று நேற்று விரக்தியில் அறிக்கை ஒன்றை விட்டார் சிம்பு. அவரின் இந்த அறிக்கை ஹன்ஷிகா இரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. நல்லவேளை ஹன்ஷிகா தப்பித்துக் கொண்டார், சிம்புவெல்லாம் ஒரு...

இந்த கதையில அமிதாப்பச்சனும் வராருங்க...! உங்களுக்கு தெரியுமா?

அதோ இதோவென்று ஒருவழியாக ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதில் முதற்கட்டமாக அதன் ஆடியோ பங்ஷன் வருகிற மார்ச் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் அப்பா-மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அனிமேஷன் படம் தான் ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்ட் செய்திருக்கிறார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்திருக்கும்...

பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 + 1...!

பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயகாந்த் இன்று மாலை அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது -விஜயகாந்துக்கு மொத்தம் 12 தொகுதிகளையும், மாநிலங்களவை சீட் ஒன்றையும் தருவதாக பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் ஒதுக்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் தே மு தி க-வை விட குறைவான திகுதிகள் என்பதால் அதை பாமக இதுவரை ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது இன்னும்...

ஈறுகளில் ரத்தக் கசிவா? உங்களுக்கான வீட்டு வைத்தியங்கள்..!

ஈறுகளில் வீங்கச் செய்து பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய். இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் வெள்ளையணு புற்றுநோய்,...

கம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன..?

கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக்...

பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள் - அதிரச்சி தகவல்கள்..!

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம். என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும்....

பெண்களே கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..!

இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது…??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம். அவை * கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள். * சிறிது நேரம் மெளனமாக இருங்கள். * முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள். * பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள். * அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள். * கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். *...

செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா..?- சிவகுமார் பதில்..!

சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம்...