Friday 28 February 2014

நீ மட்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை கொழும்புல நடத்திப் பாறேன்..? : விஜய்டிவியை எச்சரித்த டைரக்டர்..!

நீ மட்டும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை கொழும்புல நடத்திப் பாறேன்..? : விஜய்டிவியை எச்சரித்த டைரக்டர்..!


விஜய் டிவி நிறுவனம் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்த டைரக்டரும், தமிழீழ ஆதரவாளருமான கெளதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை.

ஒட்டுமொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உலகம் முழுதும் அறிந்த உண்மை.

2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை. அது மட்டுமில்லாமல் வரும் மார்ச் மாதம் ஐ.நா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லண்ணா துயரத்திற்க்கு ஆளானோம்.

அதே நேரத்தில்(மார்ச்10) ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது தான் வேதனையானது.

மார்ச்1,2 ல் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து விஜய் டிவி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.

இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்க்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாக தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது. தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு,சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.

இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும்,அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பிணங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபல ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம் தான் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது என்பதும் இந்த நிறுவனம் ஏற்கனவே இலங்கையில் தனது தொலை தொடர்பு சேவையை அளித்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment