Tuesday 25 March 2014

ஜலதோசம், மூக்கடைப்பு நீங்க.. - இதப்படிங்க...!




ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.. உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் சேர்ந்து விடும்.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.

இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும். மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.

அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு.

இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலக்கவும். மண்ண்டையைச் சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம்.. மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு வேண்டாம்.

நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையைப் பூசவும். 1 மணி நேரம் நன்றாக தூங்கவும். மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்து விடும்.

கொழுப்பை குறைத்து உடம்பை “சிக்” கென்று வைத்திருக்க உதவும் உணவுகள்...!




கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது.

எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

* கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

* இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

* வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

* லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

* சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

* நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

* சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

* கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

* கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

* சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சோயாபால் தினமும் அருந்தவும்.

இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்து சாப்பிடுங்கள். தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..! - உங்களுக்காக...




மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் - இதோ முழுமையான நிவாரணம்...!


வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!


வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

Monday 24 March 2014

டீ - யில் இத்தனை வகையா...? டீ பிரியர்களே உங்களுக்காக...!




சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

மசாலா டீ:

ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ:

 குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீ:  அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ:

ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும் போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உபயோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகள், இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில் கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும்.. இது ஜலதோஷம் இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

சிம்பு, நயன்தாரா திருமணம் உண்மையா?




சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.

சரத்குமார் நடித்து வந்த வேளச்சேரி படம் டிராப் ஆனது.?!



ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த சரத்குமாரை, பழசிராஜா, காஞ்சனா போன்ற படங்கள் அவருக்குள் இருந்த வித்தியாசமான நடிகரை வெளியே கொண்டு வந்தன.


அதனால் அவரை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவான படம்தான் வேளச்சேரி. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இனியா நடித்து வந்தார்.


சிறிய இடைவேளைக்குப்பிறகு சரத்குமார் கதாநாயகனாக நடிக்க கமிட்டான இந்த படத்தில் அவருக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வீதம் சம்பளம் பேசி படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.


அந்த சமயத்தில் சில நாட்களில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் சரத்குமார் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததாககூட சலசலப்பு ஏற்பட்டது.


இருப்பினும், எப்படியும் படத்தை முடித்து விட வேண்டும் என்று வேகமாக நகர்த்தி வந்த நேரம், பைனான்ஸ் பிரச்னை வெடித்து விட்டதாம். சரத்குமார் என்ற பெரிய நடிகரின் படமாக இருந்தும் பைனான்ஸ் உதவி செய்ய யாரும் முன்வரவில்லையாம்.


அதனால், இப்போது படப்பிடிப்பை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் சரத்குமாரை விட இப்படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த இனியா பெரிய வருத்தத்தில் இருக்கிறார்.

நான் தா சீனியரு,எங்கூடத்தான் நீங்க நடிக்கனும், சிவகார்த்திகேயன்லா ஜூனியர்தாங்க...!




கதை பிடித்தால் சில ஹீரோக்கள் கால்ஷீட் கொடுப்பார்கள். சில ஹீரோக்கள் சம்பளம், பேனர், டைரக்டர் போன்ற காரணங்களினால் கால்ஷீட் கொடுப்பார்கள். நடிகர் ஜீவாவுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே முக்கியமில்லை. இவை எல்லாமே ஜீவாவுக்கு இரண்டாம்பட்சம்தான்.


தன்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அணுகும்போது, ஜீவா சொல்லும் முதல் வார்த்தை...எனக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக த்ரிஷா உடன் ஜோடி சேர வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டார். தன் ஆசையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லிப்பார்த்தார். அவரது ஆசையை நிறைவேற்ற சில தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை அணுகியபோது, மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடிக்க முடியாது என்று மறுத்தார் த்ரிஷா.


சில வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு மார்க்கெட் போனது. அதன் பிறகு என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா உடன் சேர்ந்து நடித்தார். தற்போது காஜல் அகர்வால், அனுஷ்கா, அமலாபால் என்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வருகிறாராம் ஜீவா. உங்கள் படத்துக்கு உள்ள வியாபாரத்துக்கு நீங்கள் சொல்லும் நடிகைகளை எல்லாம் நடிக்க வைக்க முடியாது என்று தயங்கித் தயங்கி ஒரு தயாரிப்பாளர் சொன்னாராம்.


கடுப்பான ஜீவா, அப்படீன்னா சில வருஷம் வெயிட் பண்ணுங்க. என் ரேன்ஜ் உயர்ந்ததும் நான் டேட் தர்றேன். அப்ப படம் பண்ணலாம், இப்ப கிளம்புங்க. என்று அடிக்காத குறையாய் விரட்டினாராம்.

தமன்னாவின் பேராசைக்கு வந்த சோதனை...!




கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிப் பின்னர் ஓரிரு வருடங்களில் முன்னணி நடிகையாகவும் மாறினார் தமன்னா. ஆனால் அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் அதிகப் படங்கள் நடிக்காமல் தெலுங்கு,ஹிந்திப் படங்களில் தனது கவனத்தைச் செலுத்திவந்தார்.

தல அஜித்தின் வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரியான தமன்னா மீண்டும் முன்னணி நடிகையாகும் முயற்சியில்
ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் தல அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பர
மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தமன்னாவை தயாரிப்பாளர் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பினை மறுத்த தமன்னா தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வரவேண்டுமானால் 15 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறியதாகவும், இதனால் கோபமடைந்த படக்குழு, தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்து, தமன்னாவை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைக் கேட்டு அதிர்ந்துபோன தமன்னா, உடனே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டதாகவும், இதற்குப் பிறகு தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு முழு ஆதரவு தருவேன் என்றும் ஒப்புக் கொண்டாராம். இதற்குப் பிறகு தமன்னா மீதான தடையை விலக்கிக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் வீரம் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

3 கோடிக்கு, 3 கோடி லாபம்! – படத்தயாரிப்பாளர்களுக்கு ஆசை காட்டும் பா.விஜய்..!




பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ஞாபகங்கள், இளைஞன் இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்த படங்கள். ஆனாலும் பா.விஜய்க்கு நடிப்பு ஆசை அடங்கவில்லை. எப்படியாவது கதாநாயகனாக ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறார்.


அதேசமயம், தயாரிப்பாளர்கள் யாரும் பா.விஜய்யை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை வைத்து படம் எடுக்கவும் யாரும் தயாராக இல்லை.


இந்த யதார்த்தம் பா.விஜய்க்கு தெரியுமோ தெரியாதோ…பிரபல படநிறுவனங்களை அணுகி தன்னை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கும்படி வாய்ப்புக் கேட்கிறார். அப்படி கேட்கும்போது, தன்னை வைத்து 3 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தால், அந்தப் படத்தை 6 கோடி ரூபாய்க்கு நானே பிசனஸ் பண்ணித் தருகிறேன் என்றும் ஆசை காட்டுகிறாராம்.

அதோடு, தன் உறவுக்காரர்கள் பல பேர் கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அந்தக் கல்லூரிகளில் இலவசமாக மெடிகல், இன்ஜினியரிங் சீட் வாங்கித்தருவதாகவும் ஆஃபர் வேறு கொடுக்கிறாராம்.


இப்படி எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு ஆசைகாட்டியும், ஆஃபர் கொடுத்தும் பா.விஜய்யை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. எனவே அவரே 1 சிடி முப்பது ரூவா என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.


தன் பேனரில் இல்லாமல் வேறு பேனரில் தயாராகி வரும் 1 சிடி முப்பது ரூவா படத்தின் புரடக்ஷன், பப்ளிசிட்டி, பிசனஸ் என அனைத்து விஷயங்களையும் பா.விஜய்தான் கவனித்து வருகிறாராம்.


பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ஞாபகங்கள், இளைஞன் இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்த படங்கள். ஆனாலும் பா.விஜய்க்கு நடிப்பு ஆசை அடங்கவில்லை. எப்படியாவது கதாநாயகனாக ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறார்.

அதேசமயம், தயாரிப்பாளர்கள் யாரும் பா.விஜய்யை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை வைத்து படம் எடுக்கவும் யாரும் தயாராக இல்லை.
இந்த யதார்த்தம் பா.விஜய்க்கு தெரியுமோ தெரியாதோ…பிரபல படநிறுவனங்களை அணுகி தன்னை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கும்படி வாய்ப்புக் கேட்கிறார். அப்படி கேட்கும்போது, தன்னை வைத்து 3 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தால், அந்தப் படத்தை 6 கோடி ரூபாய்க்கு நானே பிசனஸ் பண்ணித் தருகிறேன் என்றும் ஆசை காட்டுகிறாராம்.
அதோடு, தன் உறவுக்காரர்கள் பல பேர் கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அந்தக் கல்லூரிகளில் இலவசமாக மெடிகல், இன்ஜினியரிங் சீட் வாங்கித்தருவதாகவும் ஆஃபர் வேறு கொடுக்கிறாராம்.
இப்படி எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு ஆசைகாட்டியும், ஆஃபர் கொடுத்தும் பா.விஜய்யை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. எனவே அவரே 1 சிடி முப்பது ரூவா என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
தன் பேனரில் இல்லாமல் வேறு பேனரில் தயாராகி வரும் 1 சிடி முப்பது ரூவா படத்தின் புரடக்ஷன், பப்ளிசிட்டி, பிசனஸ் என அனைத்து விஷயங்களையும் பா.விஜய்தான் கவனித்து வருகிறாராம்.
- See more at: http://www.cinebeeps.com/archives/16713#sthash.qGFIxBJW.dpuf

எளிய இயற்கை மருத்துவம் - வாழ்க வளமுடன்...!


எளிய இயற்கை மருத்துவம்:-

1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.

9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.

10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.

11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.

12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.

17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.

18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.

19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.

முடி உதிர்கிறதா..? பொடுகு தொல்லையா..? இதோ தீர்வு டாஸ்மார்க் கடைகளில்..




கிக் இற்காக இன்றைய இளசுகள் பீருக்கு அடிமைப்பட்டுள்ளனர். பீரினால் கிக் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.
காரணம், பீர் ஆனது தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக இருப்பதாக விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

பீரில் முடிக்கு செழுமை அளிக்கக்கூடிய விற்றமின்களும், புரதங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

பீரில் உள்ள விற்றமின் பி ஆனது தலைமுடிக்கு சிறந்த மென்மையை அளிக்கின்றது.

அத்துடன் பீரில் காணப்படும் பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை தலைமுடிக்கு உறுதி அளித்து முடி உதிர்வு, முடி சிதைவு, பொடுகு தொல்லை என்பவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.
எப்படி பயன்படுத்துவது..?

பீரை குடிப்பதால் இந் நன்மைகளை பெற்றுவிட முடியாது. அதனை நேரடியாக தலையில் பூசவேண்டும்.

01. முதலில் பீரை திறந்து அதில் வாயுகுமிழிகள் வெளியேறி முடியும் வரை காத்திருக்கவும். (இதில் முக்கிய விடயம், பீர் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும்.)

02. பின்னர் தலைமுடியை ஷம்பூ போட்டு நீரினால் நன்கு அலசவும்.

04. அதன் பின்னர் பீரை தேவையான அளவு தலையில் ஊற்றி, விரல்களால் 5 நிமிடங்களுக்கு குறையாமல் மசாச் செய்யவும்.

05. இறுதியாக தலைமுடியை நீரினால் கழுவி, தேவை ஏற்படின் மீண்டும்
ஒருமுறை ஷம்போ போட்டு கூந்தலை லேசாக அலசலாம்.
குறிப்பு: இதில் எவ் இடத்திலும் சூடான நீரை பயன்படுத்த வேண்டாம்.

பீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்?

01. தலைமுடி நன்கு பிரகாசிக்கும்

02. தலைமுடி மென்மையாக இருக்கும்

03. தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்

04. தலைமுடியின் உறுதி அதிகரிக்கும்

05. முடிஉதிர்தல், பொடுகு பிரச்சினை முடிவுக்கு வரும்.

பீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன தீமை..?
பீர் வாசனை அன்று முழுவதும் உங்கள் தலையை சுற்றிவரலாம்..!
(பீரை பயன்படுத்திய பின்னர் வாசனையான ஷம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசுவதால் இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.)

இவ்வாறு வாரத்துக்கு ஒருமுறை தலைமுடிக்கு பீரை பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

ஹீரோக்களை டம்மியாக்கவே நான் ஹீரோவாக நடிக்கிறேன்...! சந்தானம்




தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார்.


சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள். இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது.


ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக நடிக்க முடியும்.


அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி கைதட்டலையும் அள்ளணும். இதை ஒரு பெரிய ஹீரோ செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க. புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க. அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன்.


வழக்கமான என்னோட படத்துல வர்ற காமெடியை விட கூடுதலா கொஞ்சம் காமெடி சேர்த்துகிட்டு ஹீரோவாகிடவில்லை. நான் எது பண்ணினதாலும் மக்கள் ரசிச்சு கைதட்டுவாங்கன்னும் நினைக்கல.


ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம். படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு - அதிரடி முடிவு...!




பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் மவுனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது.

அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணியை ஆதரித்தார். அந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தார். அந்த அணி அமோக வெற்றி பெற்று ரஜினியின் அரசியல் செல்வாக்கை வலுவாக பறைசாற்றியது. அதன் பிறகு 1998–ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார்.

அப்போது அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்து நின்றன. அந்த சமயம் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது பாரதீய ஜனதாவுக்கு அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வைத்தது. இதனால் 1999–ல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தார்.

2004–ல் பா.ம.க.வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்தது. கட்சி துவங்குவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பா.ம.க.வை தோற்கடிக்க எதிர் அணியான பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைக்கும்படி வாய்ஸ் கொடுத்தார். அதற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக எந்த கட்சிக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுங்கியே இருக்கிறார்.

இந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் நெருக்கமாகி விட்டார். ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார். எதிர் முகாமில் இருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோருடனும் நெருக்கமானார். ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு அன்புமணி நேரில் வந்து வாழ்த்தினார். இது போல் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடியுடனும் நட்பு வைத்து இருக்கிறார்.

எல்லா தலைவர்களுடனும் இந்த நல்லுறவை நீடிக்க செய்வதே அவர் எண்ணமாக இருக்கிறது. எனவே வரும் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்..!




சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படம் ‘வேட்டைக்காரன்’. குறுகிய கால தயாரிப்பு. எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனங்கள். கே.வி.மகாதேவன் இசை. 100 நாள் படம். 1965ல் ஸ்ரீதரின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’.

 கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என நான்கு பொறுப்பையும் ஸ்ரீதர் கவனித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். அதேபோல் ஸ்ரீகாந்தை (‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த்) ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


நிர்மலாவுக்கு முக்கிய ரோல் படத்தில் இருந்தது. கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோயின்தான். மெயின் ஹீரோயின் வேடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என ஸ்ரீதர் குழப்பத்தில் இருந்தார். அப்போதுதான் கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்டார். அந்த படங்களை பார்த்தார். அவரையே புக் செய்தார். இந்த படம் மூலம்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.


படம் முடிந்து சென்சாருக்கு சென்றது. தேவையே இல்லாமல் ஏதோ ஒரு காட்சிக்காக சென்சார் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து வ¤ட்டது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியாக இருநதது. ஸ்ரீதருக்கோ பெரும் அதிர்ச்சியை இது தந்தது. படத்தில் கவர்ச்சி காட்ச¤கள் அதிகம் போலிருக்கிறது என்ற பேச்சு பரவிவிட்டது. முதல் நாள் முதல் ஷோவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் பட்டாளம் நிரம்பி வழிந்தது.


படம் முடிந்து போகும்போது தியேடடர் சீட்டுகளை கிழித்து, கலாட்டா செய்துவிட்டு போனார்கள். சில தியேட்டர்களில் பாதி படத்திலேயே கலாட்டா செய்தனர். காரணம், முழு நீள குடும்ப கதை படமிது.


ரசிகர்களின் இந்த செயல்களால் படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டனர். மூன்றே வாரத்தில் பல தியேட்டர்களிலிருந்து படத்தை எடுத்தும் விட்டனர். இதற்கிடையே படம் பார்த்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது.


அது படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரீதரின் நேர்மையான உழைப்பை பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. கிராமப்புறங்களில் படம் பிக்அப் ஆக தொடங்கியது. படம் நல்லா இருக்கு எனற டாக் பரவ ஆரம்பிக்கவே வேறு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் ஸ்ரீதர். அதன் பின் படம் நிற்காமல் ஓடு ஓடு என ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அமர்க்களமான ஹிட் என்றால் இதுதான் என சொல்லும்
அளவுக்கு பேசப்பட்டது.


படத்தில், நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் அங்கே... நீ வாராதிருந¢தால்... என்னை பாராதிருந்தால்... நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையா...என்றொரு கண்ணதாசனின் பாடல் பதிவாகியிருந்தது. படத்தில் ஸ்ரீகாந்தை பார்த்து ஹீரோயின் பாடும் வரிகள் இவை. இதை மக்கள் ஏற்பார்களா என சந்தேகத்தை ஸ்ரீதருக்கு அவரது உதவியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.


இதனால் இவ்வளவு அழகான பாடல் படத்தில் இடம்பெறாமலே போய்விட்டது. இதன் மெட்டும் மிக அருமையாக இருக்கும். எனக்கு இந்த பாடல் வரிகளை கொடுத்து சம்பளமும் பெற்றுவிட்டதால், அந்த வரிகளை வேறு படத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு தோன்றவில்லை. அவன்தான் கவிஞன் என என்னிடம் ஒருமுறை ஸ்ரீதர் கூறினார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் இந்த ஆண்டில்தான் வெளியானது. தேசிய விருது பெற்ற படமிது. ஜெயகாந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த படம். ஆசியா ஜோதி பிலிம்ஸ் பெயரில் இப்படத்தை தயாரித்தார். பிரபலம் ஆகாத பிரபாகர், வீராசாமி, காந்திமதி நடித்த படம். ஆனால், இதன் கதையும் அதை சொன்ன விதமும் புதுமையானது. நட்சத்திர நடிகர்கள் இல்லை என்பதால் இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை.


 ஜெயகாந்தனே படத்தை வெளியிட்டார். ரிலீசுக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்களும் கேம் ஆடினார்கள். டிக்கெட் நிறைய இருந்தும் தியேட்டரில் ஹவுஸ்புல் என போர்டு வைத்துவிடுவார்கள். இதை நம்பி ரசிகர்கள் திரும்பிவிடுவார்கள். ரசிகர்கள் போனதும் போர்டை எடுத்துவிடுவார்கள். படம் பார்க்க ரசிகர்கள் வரவில்லை எனக் கூறி படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை ஜெயகாந்தனே எனனிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.


தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் வெளியான படம் ‘இதயக்கமலம்’. எல்.வி.ப¤ரசாத் தயாரித்தார். அவரது சிஷ்யரான ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கினார். வசனம் ஆரூர்தாஸ். கே.வி.மகாதேவனின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட். ரவிச்சந்திரனுடன் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடித்த படம். நன்றாக ஓடியது.

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பாயும் புகார்கள்....! - பீஸ்ச புடுங்க போறாங்க...




மதுரவாயல் அருகே உள்ள வானகரம்–அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.


 ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார்.


அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.


இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

முன்பு சூப்பர்ஸ்டார்.., இப்ப அல்டிமேட்ஸ்டார் அசத்தும் ஷாருக்கான்...!!!




வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான்.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.

அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.

இந்த விஷயத்தை அறிந்த பாலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.

கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.

கோச்சடையானில் ஷாருக்கான் ரஜினியை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரகனியை பாராட்டிய சகாயம் I.A.S...!




நிமிர்ந்து நில் படம் பார்த்து பலரும் தன்னை பாராட்டினர்கள் என்று சமுத்திரகனி தெரிவித்தார்.


அதில் முக்கியமாக சகாயம் IAS தன்னிடம் பேசும்போது ஊழலுக்கு எதிராக இந்த உலகில் யார் குரல் கொடுத்தாலும் அவன் என் நண்பன் என்று சொல்லி பாராட்டினார்.


 அவரின் ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து’  என்ற வாசகத்தை தான் படத்தில் பயன்படுத்தினேன், அவர் அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது.


ஜெயம் ரவியின் கதாபாத்திரதின் பெயர் அரவிந்த் என்று இருப்பதால் பலரும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோடு அதை ஒப்பிடுகிறார்கள்.


நான் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் கதையை ஜெயம் ரவியிடம் சொல்லிவிட்டேன். அதனால் அதற்கு இதற்கும் சமந்தமில்லை.


 நாங்கள்  நினைத்த பலவிஷயங்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து வந்தன. அரவிந்த் என்ற என் நண்பன் இங்கே இருக்கும் ஊழல் விஷயங்களால் திணறிப்போய் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டான்.


அவனை நினைத்துத் தான் ஜெயம் ரவியின் கதாபாத்திரதிற்கு அரவிந்த் என்று பெயர் வைத்தேன் என்றார்.

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!




ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

படத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை...! - காரணம் சொல்லும் நடிகை...!




வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.


 "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் பணம் வாங்காமலும் நடிக்க தயார்" என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல. அன்னிக்கு அனுமதிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு ஹீரோயினா இருந்திருப்பேன்.


இப்போ கல்யாணமாகி துபாயில செட்டிலாகிட்டேன். என்னோட கணவர் துபாய், லண்டன் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார். நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துறேன். தீடீர்னு ஒரு நான் சினிமால நடிக்கட்டுமான்ன ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கு விருப்பமுன்னா நடி என்றார். நடிக்க வந்து விட்டேன்.

நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. சினிமா மேல உள்ள பக்தியில நடிக்க வந்திருக்கேன். அதனால கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். என்னோட வாழ்க்கை ரொம்ப மார்டன்தான்.


அதனால வில்லேஜ் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆயிரத்தில் இருவர்ங்ற படத்துல அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல கதையோட வந்த இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன்.

 என்னோட திறமையை வெளிப்படுத்துற மாதிரி நல்ல கேரக்டரோடு வந்தால் பணம் வாங்காமல் கூட நடிக்க ரெடி. என்கிறார் ரித்திகா.

இவுங்க தாங்க சொந்த தியேட்டர்ல படம் காட்ரவங்க...!




சிவாஜி குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார்.


இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி ரிலீசானது.


கும்கி படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சரவணன் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளுடன் படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட்டை படம் கொடுக்கவில்லை.


 என்றாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபமும் இல்லை, பெரிய அளவில் நஷ்டமும் இல்லை என்பது சினிமா வியாபார வட்டார தகவல்.


படம் 25 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியது. சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் 50வது நாளை தொட்டது.


அதுவும் ஓரிரு காட்சிகளாக. சிவாஜி குடும்பத்தின் தியேட்டரான சென்னை சாந்தியில் தினமும் ஒரு காட்சியாக திரையிட்டு 100வது நாளை எட்டிப்பிடிக்க வைத்துவிட்டார்கள்.


கும்கியை போலவே இந்தப் படமும் 100 வது நாள் போஸ்டரை கண்டுவிட்டதில் சிவாஜி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி.

Sunday 23 March 2014

அறுசுவை உணவு...! - எதில் இருக்குனு உங்களுக்கு தெரியுமா...?




காரம்:

 உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு:

 உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.


இனிப்பு:

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்பு: 

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


துவர்ப்பு:

 இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு:

 ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

ஞாபக மறதி உள்ளவரா நீங்கள்... - அவசியம் இதப்படிங்க...!




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:


* அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:

நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

* நன்கு தூங்குங்கள்:

தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.


* வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:

ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.


* எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:

பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.


* எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:

குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள். எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.


* நினைவூட்டும் தந்திரங்கள்:

ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க - சித்தமருத்துவம்..!




பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம் .

பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் .

எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விஷமனாலும் .

 அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும் .


சீத மண்டலி

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்

குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும் .


வண்டுகடி

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.


செய்யான் விஷம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.


பூரான்

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும் .

சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விஷம் முறியும் .


விரியன் பாம்பு கடித்தால்

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும் .


நல்ல பாம்பு கடித்தால்

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும் .

தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும் .

தேள் கடித்தால்

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும் .

நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும் .


எலிக்கடிகள்

அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும் .

அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும் .

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் .

பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்

இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் . சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்!

வெந்தயம் - வயிற்றுக்கு நண்பன்... சக்கரைக்கு எதிரி...!




மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா... அதோட பலனே வேற. அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப் பார்க்கலாமா!

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா... தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு... தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா... சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும்.

சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு... தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா... அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு படுக்காது.

அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா... தாய்ப்பால் அதிகமா சுரக்கும். வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தா... மதுமேகம் (சர்க்கரை நோய்) தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!

தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா... சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!

வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா? ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த வெந்தயத்தை சாப்பிடறதோட... இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.

இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க... தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம். வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும் நல்ல பலன்களை அடையலாம்!

ஹன்சிகா - அனுஷ்கா - ஆன்ட்ரியா''தான் வேணும்..-அடம் பிடிக்கும் ஜீவா...!




கதை பிடித்தால் சில ஹீரோக்கள் கால்ஷீட் கொடுப்பார்கள். சில ஹீரோக்கள் சம்பளம், பேனர், டைரக்டர் போன்ற காரணங்களினால் கால்ஷீட் கொடுப்பார்கள்.

நடிகர் ஜீவாவுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே முக்கியமில்லை. இவை எல்லாமே ஜீவாவுக்கு இரண்டாம்பட்சம்தான். தன்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அணுகும்போது, ஜீவா சொல்லும் முதல் வார்த்தை...

எனக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக த்ரிஷா உடன் ஜோடி சேர வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டார். தன் ஆசையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லிப்பார்த்தார்.

 அவரது ஆசையை நிறைவேற்ற சில தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை அணுகியபோது, மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடிக்க முடியாது என்று மறுத்தார் த்ரிஷா.

சில வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு மார்க்கெட் போனது. அதன் பிறகு என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா உடன் சேர்ந்து நடித்தார்.

ற்போது காஜல் அகர்வால், அனுஷ்கா, அமலாபால் என்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வருகிறாராம் ஜீவா.

உங்கள் படத்துக்கு உள்ள வியாபாரத்துக்கு நீங்கள் சொல்லும் நடிகைகளை எல்லாம் நடிக்க வைக்க முடியாது என்று தயங்கித் தயங்கி ஒரு தயாரிப்பாளர் சொன்னாராம்.

கடுப்பான ஜீவா, அப்படீன்னா சில வருஷம் வெயிட் பண்ணுங்க. என் ரேன்ஜ் உயர்ந்ததும் நான் டேட் தர்றேன். அப்ப படம் பண்ணலாம், இப்ப கிளம்புங்க. என்று அடிக்காத குறையாய் விரட்டினாராம்.

கண்களை தாக்கும் கணினி - அதிர்ச்சி தகவல்......!




இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு.

கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....

முதலில் அதிக நேரம் கணினியைப் பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கணினி திரைவில் வெளிச்சத்தை பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

அலுவலகத்தில் வேலை செங்கிறவர்களுக்கு இது சாத்தியப்படாது. ஆனால் இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஓய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

தொடர்ந்து கணினி முன்பு வேலை செய்யும் நபர்கள் இடை இடையே கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது. கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று.

இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும் இதுபோல் செய்தால் உடல்வலி அதிகம் வருவதை தவிர்க்கலாம். பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்ததது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால் பாதத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டைப் செய்யும் போது முழங்கைகளை இடையில் பக்கத்தில் வைத்திருப்பதால் கைகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியையும் எளிதாக குறைக்கலாம்.

கணினி திரையில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். இந்த 6 செயல்களையும் செய்து கணினி பாதிப்பில் இருந்து கண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தவற விட்டால் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது போன்ற நிலை தான் ஏற்படும்.

உலகின் மிகவும் மோசமான நகரம் எது தெரியுமா..?




உலகின் முக்கிய பெருநகரங்களை அரசியலமைப்பு, குற்ற நிகழ்வுகள், சுற்றுச்சூழல் மாசு போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையிலும், அங்கு வாழும் மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற அளவுக்கோலின் படியும் ‘மெர்செர் கண்சல்ட்டிங் குரூப்’ என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி பட்டியலிட்டு வருகிறது.

உலகில் உள்ள 239 முக்கிய நகரங்களின் தரவரிசை பட்டியலை இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அந்நிறுவனம், அனைத்து வகைகளிலும் உலகின் மிகவும் மோசமான நகரம் என்று ஈராக் தலைநகரான பாக்தாத்தை குறிப்பிட்டுள்ளது.

இங்கு வாழும் மக்கள் அன்றன்றாடம் உயிர் பயத்துடன் தீவிரவாத தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு,போதுமான குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வெளியேற்றும் வசதி போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலையில், உரிய வேலைவாய்ப்பின்றி ஊழல் நிறைந்த அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருவதாக இந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கி.பி.762-ம் ஆண்டு டைகிரிஸ் ஆற்றின் மீது உருவாக்கப்பட்ட பாக்தாத் நகரம், வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான நகரங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்றது.

தலை சிறந்த பல்கலைக்கழகங்கள், வரலாற்று பதிவுகளை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கும் கலையழகு மிக்க அருங்காட்சியகங்கள், நவீன விமான நிலையம், என அரபு நாடுகளின் கம்பீர அடையாளமாக திகழ்ந்த இந்நகரம் இன மோதல்களாலும், அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடனான போர் ஆகியவற்றிலும் சிக்கி, உருக்குலைந்து, சின்னாபின்னமாகி தற்போது பேய் வீடு போல் காட்சியளிப்பதாக உள்ளூர்வாசிகள் கவலையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் இரவு வேளைகளில் வெளியே செல்ல பயந்தபடி, ஒவ்வொரு நிமிடத்தையும் மரண பயத்துடன் கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்..!




பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. பெரிய அளவில் உருண்டையான இலை வகையை சேர்ந்த முட்டைகோஸ் கிழக்கு மெடிடேரேனியன் மற்றும் ஆசியாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். சுலபமாக அனைவராலும் வாங்கக்கூடிய மலிவு விலை காயாகவும் விளங்குகிறது முட்டைக்கோஸ்.

முட்டைக்கோஸிலேயே சிவப்பு மற்றும் பச்சை என பல வகைகள் உள்ளது. அவைகளை பச்சையாகவும் உண்ணலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். சில காயை போல் அல்லாமல், இதனை பச்சையாக சாப்பிட்டாலும் சுவை மிகுந்ததாகவே இருக்கும். அவற்றின் சுவை லேசான இனிப்புடன் நுகர்வதற்கும், சுவைக்கும் நன்றாக இருக்கும். வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ள முட்டைக்கோஸில் கலோரிகளும் குறைவாக உள்ளது. இதனை கிழக்கு மற்றும் மேற்கு வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இப்போது அந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்ப்பதால், எந்த மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!!

புற்றுநோயை தடுக்க உதவும்

முட்டைக்கோஸில் உள்ள பல குணங்கள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை எதிர்த்து போராடும். அதிலும் இதில் உள்ள சல்போரோபேன் மற்றும் இண்டோல் 3 கார்பினோல் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டவைகளாகும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து இயக்க உறுப்புகளை அடக்கும்.

அழற்சியை எதிர்க்கும் குணங்கள்

இந்த காய்கறியில் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளதால், அழற்சியினால் ஏற்படும் மூட்டு வலியை எதிர்த்து போராடும்.

கண்புரை இடர்பாட்டை நீக்கும்

முட்டைக்கோஸில் உள்ள பீட்டா-கரோட்டின் கண்களில் ஏற்படும் மாக்குலர்த்திசு சிதைவில் இருந்து காக்கும். அதனால் கண்புரை வராமல் காக்கும்.

அல்சைமர் ஏற்படும் ஆபத்து குறையும்
முட்டைக்கோஸை உட்கொண்டால், முக்கியமாக சிவப்பு நிற முட்டைக்கோஸ், அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது. அதற்கு காரணம் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே என்னும் சத்து தான்.

குடற்புண் சிகிச்சைக்கு உதவி புரியும்
குடற்புண் அல்லது வயிற்றில் ஏற்படும் அல்சரை குணப்படுத்த முட்டைக்கோஸை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் சாற்றில் உள்ள அதிக அளவிலான க்ளுடமைன், அல்சரை குணப்படுத்தும் குணங்களைக் கொண்டது.

உடல் எடை குறைய துணை நிற்கும்
எப்போதும் உடல் எடை மீது கவனம் கொண்டவர்கள் கண்டிப்பாக முட்டைக்கோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முழு கப் சமைத்த முட்டைக்கோஸில் வெறும் 33 கலோரிகள் தான் உள்ளது. அதனால் முட்டைக்கோஸ் சூப்பை எத்தனை கப் வேண்டுமானாலும் குடியுங்கள், அது எடையை அதிகரிக்காது.

மலச்சிக்கலுக்கு நிவாரணி

இதிலுள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்திற்கு உறுதுணையாக விளங்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

பொலிவான சருமம்

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளதால் அது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தக்க வைக்கும்.

தசை வலியில் இருந்து நிவாரணம்

முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசை வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். எனவே தசை வலி இருக்கும் போது முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்...!




*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ரஜினி வழியில் நான் குறுக்கிடமாட்டேன்.. ஏனா ஏற்கனவே வச்ச ஆப்பே இன்னும் எடுக்கல..!




 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியை பொறுத்தே 'தெனாலிராமன்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு மறுபடியும் நடித்து வரும் படம் 'தெனாலிராமன்'. . ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் யுவராஜ் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியைப் பொறுத்தே, 'தெனாலிராமன்' தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா தனது ட்விட்டர் தளத்தில், "'தெனாலிராமன்' படத்தின் சென்சார் அடுத்த வாரம் நடைபெறும்.

ஏப்ரல் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவும், 11ம் தேதி படத்தினை வெளியிடலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறோம்.

 ஆனால் 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியைப் பொறுத்தே 'தெனாலிராமன்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

ரஜினியுடன் மோதும் வடிவேலு என்ற செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஜில் ஜங் ஜக் - ஒரு அலசல் - எல்லாமே சில காலம்தான்...!




சந்தில் சிந்து  பாடுவது கேள்விபட்டு இருப்பீர்கள், ஆனால் இப்போது தான் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் சினிமாவை தன் நக்கல் பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டி போட்ட நம்ம கவுண்டமணி, சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்த காலத்தில் பல பேர் காளான்போல் நுழைந்தனர், அந்த வரிசையில் முதலில் நிற்பவர் சந்தானம்.

சந்தானம் பண்ற காமெடிகள் அனைத்தும் கவுண்டரின் ஸ்டைலில் உள்ளவை.

காலப்போக்கில் “டூப்ளிகட்  கவுண்டர்”  என்று கூட சந்தானத்தை கிண்டல் அடித்தார்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் திசையை நோக்கி பயணித்தார் சந்தானம்.

பிறகு அவருக்கு சுத்தி சுத்தி சுக்கிர திசை அடிக்க ஆரம்பித்தது, வெற்றி மேல் வெற்றி, பல ஹீரோக்கள் அவர் கூட நடிக்க ஓத்த காலில் நின்றார்கள், சில படங்கள் கூட அவரால் ஓடியது, குறிப்பாக இயக்குனர் ராஜேசுடன் இவர் கூட்டணி சேர்ந்த படங்கள் எல்லாம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பின.

ஆனால் அதே இயக்குனர் நடிப்பில் தீபாவளி அன்று வெளி வந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா படு தோல்வி அடைந்ததால், சந்தானத்தின் காமெடிகள் சலித்து விட்டன என்ற  பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துவிட்டன, இதையும் தாண்டி பல சம்பள சர்ச்சையிலும் சிக்கினார் சந்தானம்.

இந்த இடைப்பட்ட கேப்பில் என்ட்ரி ஆனார் நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான அவர், அதற்கு அடுத்ததாக நடித்த சில படங்கள் வர்த்தக ரீதியாக  வெற்றி அடைந்தன.

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி அடைந்து, அவரின்  காமெடி அனைவராலும் கவரப்பட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மோஸ்ட் வாண்டட் கமெடியனாக உருவெடுத்தார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாக்களை அசராமல் சாப்பிட்டு கடைக்காரரை அசரவைத்ததுடன்,  நம்மையும் சேர்த்து இன்று வரை அசரவைத்தவர் சூரி. அதனால் தான்  இன்று வரை அவர் பரோட்டோ சூரி என்று ரசிகர்களால்   அழைக்கப்படுகிறார்.

படங்கள் மேல் படங்கள் கமிட் ஆக தனக்கு ஒரு குரூப்பையும் அமைத்து கொண்ட  அவர் மீது ஹீரோக்கள், மற்றும் இயக்குநர்களின் பார்வை திரும்பியது.

சந்தானத்திற்கு அடுத்தபடியாக காமெடி லிஸ்ட்டில் நம்ம தாம் இருக்கோம் என்பதை தெரிந்துகொண்ட சூரி, தற்போது கணிசமாக சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம்.

இதுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக ரீஎண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நம்ம கவுண்டர்.

தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் 49 ஓ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆகமொத்தத்தில் பந்தயத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தனது வெற்றிக்கு காரணமான இயக்குனருக்கே அல்வா கொடுத்த சிவகார்த்திகேயன்...!




வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது.

தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது.

இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம்.

அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம்.

அதை நிராகரித்த சிவகார்த்திகேயன் நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பிறகு இந்த காம்பினேசனுக்கு ரொம்பவும் எதிர்பார்ப்பு இருக்கு, அதனால் எனக்கு விருப்பமில்லை.

எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார்.

எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனால் புள்ளி மான் வேகத்தில் கதை ரெடி பண்ணிட்டு இருக்கிறாராம் இயக்குனர் பொன்ராம்.

சத்துப் பட்டியல் ஆலிவ் எண்ணெய் இருக்குங்க...!




ஆலிவ் எண்ணெய் தன் நறுமணத்தாலும், சுவையாலும், சத்து பொருட்களாலும் உலகலாவிய புகழ் பெற்றது. இந்த எண்ணெய், அறுவடை செய்யப்படும் ஆலிவ் காய்களின் முதிர்ச்சிக்கு ஏற்ப நிறம் மாறும். ஆலிவ் எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் ஆலிவ் எண்ணெய் சுமார் 884 கலேரிகள் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

அதிக கொதிநிலை கொண்டது ஆலிவ் எண்ணெய். 210 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில்தான் ஆவியாகும் என்பதால் உணவுப் பண்டங்கள் விரைவில் சமைக்க உதவியாக இருக்கிறது. அதிக அளவில் லிப்பிடுகள் இதில் உள்ளன. இவை பூரிதமான கொழுப்பு, ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு, பலபூரிதமாகாத கொழுப்புகளை ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாக மாற்றி வழங்கும்.

கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ஆலிவ் ஆயில்கள் எளிதில் கெடுவதில்லை. நல்ல குளிர்ச்சி கொண்டது. நீண்ட காலம் வைத்திருந்து சமைக்கப் பயன்படுத்தலாம். ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புகள் இதய பாதிப்புகள் மற்றும் முடக்குவாதம் ஏற்படாமல் காப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஆலிவ் எண்ணெயில் உள்ளன. இவை மூளைத்திறனுக்கு அத்தியவாசியமாகும். ஏராளமான நோய் எதிர்ப்பு பொருட்களும் ஆலிவ் எண்ணெயில் இருக்கின்றன. ஆலிரோபின், ஆலோகேன் தால் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் குறிப்பிடத்தக்கவை.

இவை வைட்டமின்களுடன் இணைந்து புற்றுநோய், உடல்எரிச்சல், கரோனரி தமனி பாதிப்பு, நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு எதிராக செயலாற்றக் கூடியது. ஆலிவ் எண்ணெயில் 'வைட்டமின் இ' உள்ளது. 100 கிராம் ஆலிவ் எண்ணையில் 14.39 மைக்ரோகிராம் அளவு உள்ளது.

இது தினமும் உடலில் சேர்க்க வேண்டிய அளவான ஆர்.டி.ஏ. அளவின்படி 96 சதவீதமாகும். இது செல் சவ்வுகள் உறுதியாக இருப்பதற்கும், தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து தற்காப்பு பெறவும் உதவியாக இருக்கும். வைட்டமின் கே, ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு உள்ளது. இது எலும்பின் எடையை அதிகரிக்க அவசியமாகும். நரம்பு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கும்.

பயன்பாடுகள்:

ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. பொறித்தெடுக்கும் எண்ணெய்ப் பண்டங்கள் தயாரிக்க உகந்தது ஆலிவ் எண்ணெய். ஸ்பெயின் நாட்டில் 'ஆன்டலுசியன் சாலட்', ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய், வெங்காயம் மற்றும் நறுமண இலைகளுடன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. இத்தாலியில் 'எக்பிளான்ட் பிரை' பிரசித்தி பெற்றது. கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவை ஆலிவ் எண்ணெயில் பொறித்து தயாரிக்கப்படுகிறது இந்த உணவு.

பிரான்சில் 'ஆலிவ் டபனேட்' விரும்பி சுவைக்கப்படுகிறது. அக்ரோட்டுக் கொட்டைகள், வெங்காயம், பூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவை ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்து சுவைக்கப்படுகிறது.

புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தரும் டி.இமான்...!




விஜய் டி.வி.யின் ‘ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்த திவாகருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வழங்கிய டி.இமான்,


அதற்கடுத்து கேரளாவை சேர்ந்த கண்பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை ஒரு படத்தில் பாட வைத்தார்!


இப்படி நிறைய புதியவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி வரும் டி.இமான், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சரத் சந்தோஷ் என்ற இளைஞருக்கும் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.


இமான் இசை அமைக்கும் ’பஞ்சுமிட்டாய்’ படத்தில் வரும் டூயட் பாடல் ஒன்றில் சின்மயி கூட பாடுகிறார் சந்தோஷ்!


இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாபா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்..! நெஜமாதாங்க...



கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.

கிரீன் டீயின் நன்மைகள்……..

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

அஞ்சானை காப்பி அடித்த பென்சில் ...!




லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், ‘அஞ்சான்’.


 இந்தப் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


 பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’


என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன்!


உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’


 என்பது குறிப்பிடத்தக்கது!


 ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும்


‘பென்சில்’ படத்திலும் இந்த கேமராவை பயன்படுத்துகிறார்கள்!


முதலில் வேறு கேமராவை பயன்படுத்தி ‘பென்சில்’


படத்தின் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் இப்போது


 ‘ரெட் டிராகன்’ கேமராவை வைத்து பென்சிலை படம் பிடித்து வருகிறார்கள்!

லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம்...! திடுக்கிடும் பின்ன்னி...!




ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார் லிங்குசாமி.

ஒரு நேரத்தில் ஒரு படம் தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம்.

அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கும் முன்னர் கடுமையாக நிதி நெருக்கடியை சந்திப்பார்கள்.

ஆனால் ஒரே தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கின்றார் என்பதே இப்போதைய கோலிவுட்டின் உச்சபட்ச டாக்.

இதுகுறித்து கோலிவுட்டில் பலவித கிசுகிசுக்கள் கசிந்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி லிங்குசாமிக்கு சுமார் 200 கோடி ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்துதான் லிங்குசாமி இத்தனை படங்களையும் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்பினரோ மதுரை அன்புவிடம் மொத்தமாக 50 கோடிக்கும் மேல் லிங்குசாமி கடன் வாங்கி ஒவ்வொரு மாதமும் கரெக்டாக வட்டி கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டு கிசுகிசுக்களும் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அம்பூட்டு நல்லவனாய்யா நீ......? - வியக்க வைத்த நடிகர்..!




சமீப நாட்களாக திரைத்துறையிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்(விமர்சிக்கப்பட்டவர்) சிவகார்த்திகேயன். தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மான் கராத்தே திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.


அப்போது ‘உங்களது ஒவ்வொரு படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றதே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன் “சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் கதைக்கு தேவைப்படுவதால் என் படங்களில் இருக்கிறதே தவிர, 


என் சொந்ஹ முயற்சியால் புகுத்தப்பட்டவை அல்ல. அப்படி இருந்தும் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதை நான் படங்களில் தவிர்த்து விடுவேன். படத்திற்காகத்தான் நான் புகைப் பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை செய்கிறேன். 


சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது.(சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது)” என்று கூறினார்.

 மேலும் அவர் அடுத்ததாக நடிக்கும் இரு படங்களின் கதாபாத்திரங்களின் தனிச்சிறப்பே குடிக்காதவன், புகை பிடிக்காதவன் என்பது தானாம். ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை குடித்ததுமில்லை,


 சிகரெட் பிடித்ததுமில்லை என்று கூறியதைக் கேட்ட அனைவரும் அம்பூட்டு நல்லவனாய்யா நீ.... என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை படங்களில் மட்டும் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்தால் போதும் என்கிறது ரசிகர்களையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகம்.

கமல் படத்தில் ரஜினி நடிக்கிறாராமே..! - வதந்தியா இருக்குமோ...?




ஆரம்ப காலங்களில் கமல் நாயகனாக நடித்த படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவான பிறகுதான் தனித்துவமாக நடிக்கத் தொடங்கினார்.


இதற்கு கமலும் ஒரு முக்கிய காரணம். நாம் இருவரும் இணைந்து நடிப்பதால் ஒரு சம்பளத்தைதான் இருவருக்குமே பிரித்து தருகிறார்கள்.


அதுவே தனித்தனியாக நடித்தால் இருவருக்கும் தனி சம்பளம் கிடைக்கும் என்று அப்போது ரஜினிக்கு ஐடியா கொடுத்தார்.


அதையடுத்து இருவருமே அதை பின்பற்றி தங்களுக்கென ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனால், பின்னர் எந்தவொரு படத்திலும் ரஜினி-கமல் இருவரும இணையவே இல்லை.


அப்படி இணைந்தால் அந்த படங்களின் பட்ஜெட் 100 முதல் 150 கோடி ஆகும் என்பதால் எந்த படாதிபதியும் ரிஸ்க் எடுக்க துணியவில்லை.


இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவதாக கூறப்படுகிறது.


அதாவது 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கமல் நடிக்கும் காட்சிகளில் அவரை நடிகனாக உருவாக்கும் வேடத்தில் அவரது குருநாதரான கே.பாலசந்தரே நடிக்கிறார்.


 கமலை அவர் உருவாக்கிய காலத்தில் ரஜினியும் நடித்தவர் என்பதால், ஒரு வீடியோ கான்பரன்சிங் காட்சியில் ரஜினியும் தோன்றுகிறாராம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ரஜினி ஓ.கே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.