Friday 28 February 2014

அவ்ளோ நல்லவரா சிம்பு? நயன்தாரா...!



இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல ஹன்ஷிகாவைப் பிரிந்து விட்டார் சிம்பு.

கடந்த 14-ஆம் திகதி காதலர் தினத்தில் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் சிங்கிளாக இருக்கிறேன் என்று ஹன்ஷிகா வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலாக நானும் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று நேற்று விரக்தியில் அறிக்கை ஒன்றை விட்டார் சிம்பு.

அவரின் இந்த அறிக்கை ஹன்ஷிகா இரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. நல்லவேளை ஹன்ஷிகா தப்பித்துக் கொண்டார், சிம்புவெல்லாம் ஒரு ஆளா..? என்றெல்லாம் ஹன்ஷிகாவுக்கு ஆதரவாகவும்,சிம்புவுக்கு எதிராகவும் சமூக இணையத் தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் சில குசும்பான இரசிகர்களோ சிம்புவின் சொந்தப்படத்தில் நயன் தாரா நடிக்க வந்ததால் தான் ஹன்ஷிகா சிம்புவை கழற்றி விட்டு விட்டார். அவரிடமிரிந்து ஹன்ஷிகாவை காப்பாற்றிய நயன்தாராவுக்கு நன்றி என்றெல்லாம் கூட கமெண்ட்டுகளை அள்ளி விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சிம்புவை – ஹன்ஷிகா காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோதே ஹன்ஷிகாவின் இரசிகர்கள் அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டில் உங்களுக்கும் வேற நல்ல ஹீரோவே கெடைக்கலியா? என்று வகை தொகையில்லாமல் திட்டினார்கள்.

அவ்ளோ நல்லவரா சிம்பு?

0 comments:

Post a Comment