Friday 28 February 2014

செல்வராகவனின் சிறு வயது குசும்புகள்..!

இளசுகளின் பல்ஸ் தெரிந்த இயக்குநர் செல்வராகவனின் டவுசர் காலம்.
ஆம்லேட்டைப் பிய்த்து அதில் சோற்றை உருட்டி வைத்துச் சாப்பிட்டிருப்பார்.
அடிக்கடி மழையில் ஆட்டம் போட்டு நனைந்து வந்து அப்பாவிடம் அடி வாங்கியிருப்பார்.

டயர் கொளுத்தி வட்டமாய் நின்று கேம்ப் ஃபயர் டான்ஸ் அப்போதே ஆடியிருப்பார்.


ஹிஸ்டரி சப்ஜெக்ட்டை விரும்பிப் படித்திருப்பார். ஆனால் ஆன்சர் ஷீட்டில் மட்டும் குழப்பி அடித்து ஹிஸ்டரி டீச்சருக்கு ஹிஸ்டீரியா வர வைத்திருப்பார்.  

பாய் ஃப்ரெண்ட்ஸ் வைத்துக்கொண்டால் பிம்பிள்ஸ் வரும் அளவுக்கு அலர்ஜி என்பதால், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே வகைதொகையில்லாமல் நட்புப் பட்டியலில் வைத்திருப்பார்.

டி.எம்.எஸ் ரசிகராக, மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை எனப் பழைய பாடல்களாகப் பாடித் திரிந்திருப்பார்.

தன் தோழியைக் கண்டுகொள்ளாமல் நண்பனின் தோழியிடம் பேச அடிக்கடி முயற்சி செய்திருப்பார். இதனாலேயே அடிக்கடி பெஞ்சில் ஏறி நின்றிருப்பார்.
ஸ்கூலுக்கு மட்டம் போட வருண பகவானை வேண்டிக்கொண்டிருப்பார். மழை பெய்தால் 'நான் சொன்னதும் மழை வந்துச்சா?’ என உற்சாகமாய் வீட்டுக்குள் டான்ஸ் ஆடியிருப்பார்.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கடைசியாக ஓடி பல்பு வாங்கியிருப்பார். 'ஏன் செல்வா ஏன்?’ என யாரேனும் கேள்வி கேட்டால், 'ஓட ஓட ஓடத் தூரம் குறையல’ எனப் பாட்டாகவே பாடி ஒருபாட்டம் அழுதிருப்பார்.

டீச்சரோ, பக்கத்து கிளாஸ் திவ்யாவோ வந்து சொன்னால்தான் பரிட்சையை ஃபயரோடு எழுதுவார். இல்லை என்றால் வெள்ளைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு சோகமாய்க் கழுத்தை சாய்த்தபடி வாக்-அவுட் செய்திருப்பார்.
கேர்ள்ஸ் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இவரே 'அடிடா அவளை... வெட்றா அவளை’ என சில நேரங்களில் உக்கிரமாய் திட்டித் தீர்த்ததால், ஹெட்மாஸ்டரிடம் செமத்தியாய் அடி வாங்கியிருப்பார்.


முந்தின நாளே மக்-அப் பண்ணிவிட்டு வந்து க்ளாஸ் ரூமில் அயர்ந்து தூங்குவார். டீச்சர் எழுப்பிக் கேள்வி கேட்டால் கையைக் கட்டிக்கொண்டு அப்படியே ஒப்பித்து வாய் பிளக்கவைத்திருப்பார்!  

0 comments:

Post a Comment