Sunday, 16 February 2014

நடிகை மீது செக் மோசடி வழக்கு...!

சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் ககன்போத்ரா. இவர், சென்னை ஜார்ஜ் டவுன் 8–வது குற்றவியல் கோர்ட்டில், தாக்கல் செய்துள்ள 2 செக் மோசடி வழக்குகளில் கூறியிருப்பதாவது:– நடிகை புவனேஸ்வரி என்ற அனு, அவரது தாயார் சம்பூரணம் ஆகியோர் என்னிடம் ரூ.85 லட்சம் கடன் வாங்கினார்கள். இந்த தொகையை காசோலைகள் மூலம் இருவரும் திருப்பிக்கொடுத்தனர். இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, புவனேஸ்வரி, சம்பூரணம் ஆகியோரது வங்கி கணக்குகளில் பணம் இல்லை என்று திரும்பி...

பாலிவுட்டில் நான் சூப்பர் ஸ்டாராக வேண்டும் - நடிகை அலியா பட்

மும்பை பாலிவுட் நடிகை அலியா பட் தான் ஒரு சூப்பர் ஸ்டாராக  வேண்டும் என்பதே என ஆசை என  பேட்டி அளித்துள்ளார்.  இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; நான்  ஸ்டூடன் ஆப் தி இயர்  திரைப்படம் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனேன்.எனது அடுத்தப்படமாக ஹைவே என்ற திரைப்படம் வர இருக்கிறது. இந்த படத்தின் வெளியீடிற்காக காத்து கொண்டு இருக்கிறேன். முதலில் நான் ஒரு நல்ல நடிகையாக இருக்க வேண்டும் பின்னர் சூப்பர்...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - சந்தோசத்தில் அட்லி...!

இரண்டு விருதுகள் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார் இயக்குனர் அட்லி. ‘ராஜா ராணி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அட்லி. ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது. இந்தப் படத்தை சிறந்த முறையில் இயக்கியமைக்காக அண்ணாமலை யூனிவர்சிட்டி சார்பில் நடந்த ஒரு விழாவில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும், சென்ற ஆண்டின் கண்டெடுக்கப்பட்டவருக்கான விருதையும் அட்லிக்கு வழங்கியுள்ளனர். அட்லி, ஒரு படத்தை தான்...

மக்கள் என்ன முட்டாள்களா..?திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு..!

திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசும்போது கடுமையாக சாடிப் பேசினார். அவரது பேச்சில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவாலும் விட்டார்.  உணர்ச்சிகரமாக பேசிய குஷ்புவின் பேச்சில் கொதிப்பு தெறித்தது.. கொந்தளிப்பு துடித்தது... முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசுகையில் அவரது நாடி நரம்பு புடைக்க ஆவேசமாகப் பேசினார். அந்த ஆவேசத் துளியிலிருந்து சில... ஆதிக்கம் செலுத்துறாங்க அம்மையார். நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறாரு....

அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் - அடித்து சொல்கிறார் சிம்பு...!

அஜீத் குமார் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுவதுண்டு.  அதற்கு ஒரு சிலர் சூப்பர் ஸ்டார் ஒருவர் தான் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். மற்றும் சிலர் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயரை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிம்பு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் அது அஜீத் தான் என்று சிம்பு தெரிவித்துள்ளார்....

வாழைப்பழத்தோலை வைத்து நீரை சுத்தமாக்கலாமாக்கும்..!

இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை தவறாக திசை திருப்புகின்றன. இதற்கு பொதுமக்களிடையே சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும்,...

தமிழினப் படுகொலைக்கான புதிய ஆதாரத்தை வெளியிடுகிறது “சேனல் 4′..!

“தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் கற்பழித்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை. மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது. இந்தக் கொடிய சம்பவம்...

49 நாள் துடப்பகட்டை கட்சியின் சரித்தரம்..!

 49 நாள் தொடப்பக்கட்ட கட்சியும் – கூட்டணி தர்ம குண்டாந்தடிகளும்….அதோ இதோன்னு முடிந்தேவிட்டது 49 நாள் துடப்பகட்ட கட்சியின் சரித்தரம். இது என்ன கொடுமை என பலர் கேட்க மனதுக்குள் ஒரு ஓரமாக கூட்டணி தர்மம் என்று புருடா விட்டு தன் மகன் / மகள் / பேரன் / தோழி என அத்தனை தவறுகளுக்கு டெல்லியின் காலில் சரணாகதி அடைந்து 5 வருஷம் குப்பை கொட்டி கடைசி நாளில் சினிமா வில்லன் போல அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்து சீ சீ அந்த கட்சி சரியில்லை என அறிவிக்கும் செல்ஃபீஷ்...

வறட்சியால் சருகாகி நிற்கும் கொடைக்கானல் காடுகள்...!

வறட்சியால் சருகாகி நிற்கும் கொடைக்கானல் காடுகள்: காட்டுத் தீயைத் தடுக்க வனத்துறை தீவிரம்:-  இந்தியாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ விபத்துகள் மூலம், ரூ. 440 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொடைக்கானல் காடுகள், வறட்சியால் இந்த ஆண்டு சருகாகி நிற்பதால், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர், இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை வளம் கொண்ட இயற்கைக் காடுகள், மூங்கில்...

காதுக்குள் ஒளித்து வைத்த பிட்டு பேப்பர்: 20 வருடங்களுக்கு பின்பு கண்டுபிடிப்பு…!

சவுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் எழுதும் தேர்வில் மோசடி செய்வதற்காக காதினுள் குறிப்பு தாள் (பிட் பேப்பர்) வைத்திருந்தது 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியே தெரிந்துள்ளது. குறித்த நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நபர் தொடர்ந்து சில நாட்களாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது தான் இந்த பிட் பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதும் தேர்வில் வெற்றி...

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா..? இந்த ஜூஸ்களை குடிங்க...!

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ்...

வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....!

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக...

நாகேஷ் - வாழ்க்கை வரலாறு

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.  தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால்...

ஜாக்கிசானின் '' போலீஸ் ஸ்டோரி '' - திரை விமர்சனம்

தன் மகளைத்தேடி பார் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு மகளை பார்க்கும் ஜாக்கிசான், பார் ஓனரை காதலிப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். தன் மகளை விட அதிக வயதில் இருக்கும் பார் ஓனரை காதலிப்பது ஜாக்கிசானுக்கு பிடிக்க வில்லை. அதனால் தன் மகளிடம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்த பாரில் ஜாக்கிசான் தவிர 12 பேர் அங்கு வந்திருக்கிறார்கள். திடீர் என்று பார் ஓனர் தன் அடியாட்களை வைத்து ஜாக்கிசான் மற்றும் அங்கு வந்துள்ள 12 பேரையும் அடித்து பணயக் கைதிகளாக ஒரு ரூமில்...

பாலிவுட்டிற்குச் செல்கிறார் விஜய்..?

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ல் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த துப்பாக்கி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தயாராகிவருகிறது. ஹாலிடே என்ற பெயரில் தயாராகும் அப்படத்தில் அக்‌ஷய்குமார் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளனர். தமிழில் இப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸே ஹிந்தியிலும் இயக்கவுள்ளார். இப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்தால் நன்றாக இருக்குமென்று படத்தின் ஹீரோவான அக்‌ஷய் குமார் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2012ல்...

சிறுமியை பலாத்காரம் செய்த மாநகராட்சி ஊழியர் கைது..!

ஆலந்தூர்:சென்னை பரங்கிமலை நரசத்புரம் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் வரதராஜ் (41). இவர் மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவரது மகளுடன் விளையாடுவதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று வரதராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வரதராஜ், அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றிருக்கிறாள். அவளது உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி சிறுமியின்...

தெலுங்கு 'ஜில்லா': போட்டியிடும் முன்னணி ஹீரோக்கள்..!

'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது. விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜில்லா'. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது. ஆனால், படத்தினைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் படங்களைத் தயாரிப்பதால் ரீமேக்கையும் நாங்களே தயாரிக்க...

வீடுகள் விலை குறைவதை அறிவது எப்படி..?

 சென்னை உள்ளிட்ட நகரங்களில் புதிய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது சமீபக் காலமாகச் சற்றுக் குறைந்துள்ளது. அதுபோல, அவற்றைக் கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதி எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்ற செய்திகள் வருகின்றன. இந்தத் தகவல்கள் ஆதாரபூர்வமானவையா அல்லது யூகத்தின் அடிப்படையில் ஆனவையா? அதைப்பற்றிப் பார்த்து விடுவோம். புதுமையான குறியீடு சென்னையைப் பொறுத்தவரை 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கான வீட்டு வசதி - ஸ்டார்ட்அப்...

நாளைய தூண்களை காப்போம்..!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தைகளை தெய்வங்களாக கூட மதிக்க வேண்டாம். உயிருள்ள ஜீவன்களாக மதித்தாலே போதும் என்று சொல்லும் நிலைதான் இப்போது காணப்படுகிறது. தாய்ப்பாலை கூட விற்க ஆரம்பித்து விட்ட நிலையில், குழந்தைகள் எம்மாத்திரம்? குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் பழக்குதல் என்று மனிதத்தன்மையே இல்லாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் ஒரு ஆண்டில் சுமார் 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது....

சிறை பிடிக்கப்பட்ட கோச்சடையான்…! கவலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!

கோச்சடையான் படத்துக்கு கன்னித்தீவு என்று தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது! பின்னே…வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகிறதே…! கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, கேரளா என பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சௌந்தர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்த இளைஞர் படை இரவு பகலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணியில் ஈடுபட்டிருந்தது. ஃபைனல் டச்சாக சில வேலைகள் செய்ய...