Tuesday 11 March 2014

டிஜிட்டலில் புதுப்பித்த ஆயிரத்தில் ஒருவன் 100 தியேட்டரில் ரிலீஸ்..!




எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார்.

நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார்.

இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் புதுப்பித்து உள்ளனர்.

மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தன.

ஆர்யா மீதுள்ள கோபத்தை கொட்டி தீர்த்த நயன்தாரா...!




தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாராஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது.


இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையில் இரண்டாம் உலகம் படத்தின்போது அனுஷ்காவுடனும் ஆர்யா நட்பாக பழகயதால் நயன்தாரா கோபம் அடைந்தார். இதனால் நயன்தாராஆர்யா இடையே விரிசல் ஏற்பட்டது.


இப்போது இருவரும் விழாக்களிலோ வெளியிடங்களிலோ சந்தித்தால் பேசிக்கொள்வார்கள். ஆனால் இருவருக்கிடையே பழைய நட்பு இல்லை.


 இந்நிலையில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தது எனது அதிர்ஷ்டம் என சமீபத்தில் கூறியிருக்கிறார் ஆர்யா.


அத்துடன் அவர் நின்றுவிடவில்லை, நயன்தாரா எனது அதிர்ஷ்ட தேவதை என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் நயன்தாரா கோபம் அடைந்துள்ளாராம். நட்பே வேண்டாம் என்றுதான் ஒதுங்கி செல்கிறேன்.

அதிர்ஷ்ட தேவதை எனக்கூறி எங்களுக்குள் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்ளப்பார்க்கிறார்.

தேவையில்லாமல் இவராகவே மீடியாவுக்கு  கிசு கிசு தீனி போடுகிறார் என தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி கோபப்பட்டாராம் நயன்தாரா.