
அப்பா, தாத்தா என முன்னோர்கள் அனைவருமே நேர்மையான போலிஸ் அதிகாரிகளாக இருக்கும் தன் தலைமுறையில் தன் மகன் அசோக்கையும் போலீஸ் ஆக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அசோக்கின் தந்தை.
ஆனால் அசோக்கிற்கு அதில் விருப்பமில்லாததால் நண்பர்களுடன் தங்கி வேலை தேடி வருகிறார். அந்த நேரத்தில் நாயகியின் மொபைல் அசோக்கிடம் கிடைக்க, அதைக் கொடுக்க போகும்போது நாயகி வேலை செய்யும் கம்பெனியிலேயே அசோக்கிற்கு வேலையும் கிடைத்துவிடுகிறது. வேலையோடு வேலையாக நாயகியையும் ஒருதலையாக...