Thursday 13 March 2014

ஆஸ்கார் அப்படினா யாருங்க..? தேசிய விருதுக்கு மட்டுமே போட்டி போடும் தமிழ் படங்கள்..!




கடந்த ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன.

61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி 14ம் தேதிவரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது.

40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது. தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள் மற்றும் விடியும் முன் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் பட பிரிவில் கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி,  ‘சூதுகவ்வும்‘ படங்களும் மற்றும் திரைக்கு வரவுள்ள ‘இனம்‘, ‘நெடுஞ்சாலை‘, ‘ராமானுஜம்‘ ஆகிய படங்களும் நுழைந்துள்ளன.

தமிழ் படத்தை இனிமேல் இயக்கமாட்டேன -- மணிரத்தனம் அதிரடி...!




தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம்.

இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார்.

 இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார்.

திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார்.

அதேபோல் தமிழுக்கும் நட்சத்திர தேர்வு நடத்த முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தமிழில் கடைசியாக அவர் இயக்கிய கடல் படம் படு தோல்வி அடைந்தது. இதனால் பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.

இப்போது அவரது அடுத்த தமிழ் படத்துக்கு பைனான்ஸ் செய்ய பலரும் யோசிக்கிறார்கள்.

இதனால் டோலிவுட்டுக்கு சென்று அந்த மொழியில் மட்டுமே இப்படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

அதே சமயம், ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதை அவரது மாமியார் ஜெயா பச்சன் விரும்பவில்லை.

மகள் ஆராத்யாவை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருப்பதால் நீண்ட கால்ஷீட் தருவது முடியாத காரியம் என ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மொழியில் மட்டும் மணிரத்னம் படம் இயக்குவதற்கு இதுதான் காரணம் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.

வேகமாக கல்லாக்கட்டப்போறேன் - தாய் மீது சபதம் எடுத்த கானா ஸ்பெசலிஸ்ட்....!




கானா பாடகர்கள் பலர் சினிமாவில் பாடியுள்ளனர். என்றாலும் அவர்களெல்லாம் ஓரிரு படங்களில் பாடியதோடு, சீசன் பறவைகள் போன்று காணாமல் போய் விட்டனர்.

ஆனால் கானா பாலா மட்டுமே பல படங்களில் தொடர்ந்து பாடியபடி, கோலிவுட்டின் கானா ஸ்பெசலிஸ்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில், அட்டகத்தி, உதயம் என்எச்- 4, ராஜாராணி, சூதுகவ்வும், நிமிர்ந்து நில் என 20 பாடல்கள் வரை பாடிவிட்டார்.

அதில், ஆடி போனா ஆவணி, நடுகடலுல, காசு பணம் துட்டு மணி மணி, ஓரக்கண்ணால என பல பாடல்கள் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன.

இந்த நிலையில், காசு பணம் துட்டு மணி மணி, ஓரக்கண்ணால போன்ற பாடல்களில் தானே திரையிலும் தோன்றி நடனமாடிய கானா பாலா, தற்போது சில புதிய படங்களில் குஜிலிகளுடன் கிளுகிளுப்பு நடனமும் ஆடத் தொடங்கியிருக்கிறார்.

இதனால் வேறு எந்த கானா பாடகர்களுக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு தற்போது கிடைத்திருக்கிறது.

இப்படி பின்னணி பாடுவது, குத்தாட்டம் ஆடுவது என கானா பாலாவின் கலக்கல் அதிகரித்து வருவதையடுத்து, அவருக்கான கூலியும் படத்துக்குப்படம் எகிறத் தொடங்கியிருக்கிறது.

ஆக, காற்றுள்ளபோதே தூறறிக்கொள்வோம் என்று வேகமாக கல்லாக்கட்டத் தொடங்கியிருக்கிறார் மனிதர்.

காலம் போன காலத்துல எதுக்கு இந்த வெட்டி பந்தா...!






அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.


அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.


இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது.

இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல்,


அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார்.

ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.


அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல்.

அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும்,


தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.

அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.


அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.


இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது.

இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல்,


அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார்.

ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.


அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல்.

அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும்,


தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.