Thursday 27 February 2014

மருத்துவமனையில் விஜயகாந்த் திடீர் அனுமதி..?



சிங்கப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதற்கான காரணத்தை அவரோ, கட்சித் தரப்போ வெளியிடவில்லை.

இந்த நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.

 விஜயகாந்த்துக்கும் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும், அதுகுறித்து மருத்துவர்கள் அவருக்கு முக்கிய ஆலோசனைகள் கூறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தேமுதிக அலுவலகத்தில் விசாரித்தபோது, 'எதுவும் சொல்வதற்கில்லை' என்று கூறிவிட்டனர்.

நாகேஸ்வர ராவ்: என்றென்றைக்குமான ஒரே தேவதாஸ்..!



 காதல் தோல்வியால் துவண்டு ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்று பாடும் தேவதாஸ், ‘ஓர் இரவு’ படத்தில் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து’ என்ற பாடலில் வரும் கனவான். இந்த பாத்திரங்கள் தான் நாகேஸ்வரராவ் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு இருக்கும் அறிமுகம்.

ஆந்திர ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்களாக வளர்ந்த பெரும்பாலான நடிகர்களைப் போலவே நாகேஸ்வரராவும் சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு திரையுலகில் முக்கியமான ஆளுமையாகவும், தமது வாரிசுகளின்வழி தெலுங்குத் திரையுலகை ஆட்சி செய்த பெரிய நடிகர்களில் ஒருவருமாக இருந்தவர் அவர்.

அந்தக்காலத்தில் நடிப்பதற்கு பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளால் ஆண்களே ‘ஸ்த்ரீபார்ட்’ பாத்திரங்களில் நடித்தனர். சிவாஜியும் பெண் வேடங்கள் மூலம் புகழ்பெற்றவர் தான். நாடகப் பின்புலம் கொண்ட நாகேஸ்வர ராவ், பெண் வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

தனது 17-வது வயதில் ‘தர்மபத்தினி’ என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனுக்கு நண்ப னாக நடித்தார். ரயில்வே நிலையம் ஒன்றில் இவரைப் பார்த்த இயக்குநரும் தயாரிப் பாளருமான கண்டசாலா(இவர் இசையமைப்பாளர் அல்ல. இசையமைப்பாளர் கண்டசாலா இப்படத்தில் துணை நடிகராகவும் கோரஸ் பாடகராகவும் அறிமுக மானார்!) தனது சீதாராம ஜனனம் என்ற புராணப் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கவைத்தார். இப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன் பின்னர் தெலுங்கு, தமிழ் என்று பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார் நாகேஸ்வர ராவ்.

தமிழில் எம்.ஜி.ஆர்.,-சிவாஜிக்கு இணையாக தெலுங்கில் என்.டி.ஆரும், நாகேஸ்வரராவும் இரட்டை நாயகர்களாகக் கோலோச்சினர் என்று பலரும் தெரிவிக்கின்றனர். எனினும், ‘ஓர் இரவு’, ‘தேவதாஸ்’, ‘மாயக்காரி’, ’கல்யாணப் பரிசு’ போன்ற படங்களில் அவரது நடிப்பு மிகையில்லாத, ஆர்ப்பாட்டமான உடல்மொழி தவிர்த்த இயல்பான நடிப்பாகவே அமைந்தது. மென்மையான குரலும் பாந்த மான உடல்மொழியும் அவரது சிறப்பம்சங்களாக அமைந்தன. ‘தெலுங்கில் ’டாக்டர். சக்கரவர்த்தி’, ‘சம்சாரம்’, வெலுகு நீடாலு’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் அவரது நடிப்பில் பெரும் வெற்றியடைந்தன.

1960-களில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் நாகேஸ்வர ராவை அரசு முறை விருந்தினராக அழைத்து கவுரவித்தன. மூன்று முறை பிலிம்பேர் விருது வென்றுள்ள நாகேஸ்வரராவ், பத்மவிபூஷண், தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகளால் கவுரவிக்கப்பட்டார்.தனது பெயரால் ஏ.என்.ஆர். தேசிய விருது என்ற பெயரில் இந்தியாவின் சிறந்த திரைக்கலைஞர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கமும் விருதும் வழங்கி கவுரவித்தார். ஷபானா ஆஸ்மி, ஷ்யாம் பெனெகல் ஆகியோருடன் கே.பாலச்சந்தருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

புராணப்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பாபு இயக்கிய ‘ராம ஜெயம்’ படத்தில் வால்மீகியாக அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.தனது மகன் நாகார்ஜூன், பேரன் சைதன்யா ஆகியோருடன் அவர் நடித்திருக்கும் ‘மனம்’ என்ற தெலுங்குப்படம் தான் அவரது கடைசிப்படம். இந்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.

ஷாருக்கான், அபய் தியோல் என்று பலரும் தேவதாஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றும் தேவதாஸ் என்றால் திரைரசிகர்களின் மனதில் தோன்றுவது நாகேஸ்வரராவ் தான். தேவதாஸ் கதையை அடிப்படையாக வைத்து நாகேஸ்வர ராவ், தேவி நடித்த ‘ப்ரேமாபிஷேகம்’ என்ற தெலுங்குப்படம் தான் கமல் ஹாஸன், தேவி நடிப்பில் ‘வாழ்வே மாயம்’ என்று ரீமேக் செய்யப்பட்டது. அதனால் தான் புகழ்பெற்ற இந்தி நடிகர் திலீப் குமார் குறிப்பிட்டார், “ஒரே ஒரு தேவதாஸ் தான். அது நாகேஸ்வர ராவ் தான்”.

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி அடித்த திடீர் பல்டி..!



பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயசாந்தி, ஆந்திராவின் மெடாக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்து கொண்டார்.

தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.பி. விஜயசாந்தி.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் உடன் இருந்தார்.

இதையடுத்து மக்களவை உறுப்பினர் விஜயசாந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆசி பெற்றதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.

தொடர்நது இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் “தெலங்கானா விவகாரத்தை எழுப்பிய முதல் நடிகையான விஜயசாந்தி, காங்கிரஸில் இணைய முடிவு செய்ததை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சோனியா காந்தியிடம் அவர் ஆசி பெற்றார்.

அவரும் தொடந்து வலியுறுத்தி வந்த தெலங்கானாவுக்கான தனது போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸில் இணைந்ததாக விஜயசாந்தி கூறியிருக்கிறார்” என்றார் திக்விஜய் சிங்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேடாக் எம்.பி. விஜயசாந்தி, காங்கிரஸுடன் கட்சியை இணைப்பதற்கு தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைமை விரும்பாததை தாம் ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டார்.

மகா சிவராத்திரியன்று இரவில் கண் விழிப்பது ஏன் தெரியுமா..?



சிவபெருமான் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது சிவராத்திரி. இத்திருவிழாவின் போது பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, கடவுளிடம் இருந்து அருள் பெறுவார்கள். இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணமாக நம்பப்படுவதால், இந்தியா முழுவதும் இதனை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுகிறார்கள்.

துறவியாய் இருந்த சிவபெருமான், பார்வதி தேவியை மணந்த நாளையே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், சிவபெருமானை போலவே நல்லதொரு கணவனை பெற, பெண்கள் அவரை நினைத்து விரதம் கடைப்பிடித்து அவரை வழிப்படுவர். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்தின் நலனுக்காக, இந்நாளில் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.

சிவபெருமானின் திருமண கதை போக, சிவராத்திரியுடன் இன்னும் பல கதைகளும் அடங்கியுள்ளது. மகா சிவராத்திரியுடன் தொடர்பில் இருக்கும் பிற கதைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

கடவுள்களுக்கு கடவுள்

 'மகாதேவ்' அல்லது 'கடவுள்களின் கடவுள்' என்றே சிவபெருமான் பெரும்பாலான நேரத்தில் அழைக்கப்படுகிறார். அதற்கு அனைத்து கடவுள்களை விட வல்லமை மிக்கவர் என்று பொருள் தரும். சரி இதில்எ சிவராத்திரியுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு கதை. ஒரு முறை பிரம்மனும் விஷ்ணுவும், இரண்டு பேரில் யார் பெரியவர் என்ற சண்டையை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் சண்டை தீவிரம் அடைந்த போது, அவர்கள் மத்தியில் ஒரு எரியும் தூண் அல்லது சிவலிங்கம் ஒன்று தோன்றியது.

லிங்கத்தின் மேல் அல்லது அடி பாகத்தை கண்டறிபவர் தான் வல்லமை மிக்கவர் என்று அந்த லிங்கத்தில் இருந்து வந்த குரல் அந்த இருவரிடமும் கூறியது. உடனே பிரம்மன் லிங்கத்தின் மேல் பாகத்தை நோக்கி சென்றார். விஷ்ணுவோ லிங்கத்தின் கீழ் பாகத்தை நோக்கி சென்றார். ஆனால் இருவராலுமே எங்கே முடிகிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு, லிங்கத்திற்கு முடிவே இல்லை என்பதை விஷ்ணு புரிந்து கொண்டு தன் தேடுதலை நிறுத்தினார்.

இருப்பினும் பிரம்மன் ஒரு விளையாட்டை விளையாட நினைத்தார். லிங்கத்தின் அடி பாகத்தை கண்டுபிடித்து விட்டதாக பொய் சொல்ல முடிவு செய்தார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தாழம் பூவையும் கொண்டு வந்தார். ஆனால் அந்த பொய்யை கேட்ட சிவபெருமான் வெகுண்டெழுந்து அவரை இனி பூலோகத்தில் யாருமே வணங்க மாட்டார்கள் என்று அவரை சபித்தார்.

சிவபெருமான் ஒரு மிகப்பெரிய சக்தியாக திகழ்வதற்கு இந்த புராணமே ஒரு உதாரணம். அனைத்துக்கும் ஆரம்பமாக (ஆதி) விளங்கும் அவருக்கு முடிவே (அந்தம்) கிடையாது. மகாசிவராத்திரியின் போது தான் முதன் முதலில் சிவபெருமான் லிங்க வடிவை பெற்றார் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இரவு நேர விழிப்பு நிலை 

சிவராத்திரியின் போது மக்கள் ஏன் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு புகழ் பெற்ற கதை ஒன்று உள்ளது. ஒரு முறை, ஒரு ஏழை காட்டுவாசி, விறகு எடுக்க காட்டிற்குள் சென்ற போது, அங்கே தொலைந்து போனான். இருட்டு ஆகி கொண்டிருப்பதால், காட்டிற்குள் விலங்குகளின் சப்தங்கள் கேட்க தொடங்கின.

அதனை கேட்டு பயந்த காட்டுவாசி, ஒரு மரத்தின் மீது ஏறினான். கிளைகளுக்குள் அமர்ந்திந்திருந்த அவனுக்கு, கண் அயர்ந்தால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் இருந்தது. அதனால் தூக்கம் வராமல் இருக்க, அந்த மரத்தில் உள்ள இலைகளை பறித்து, சிவபெருமானின் பெயரை உச்சரித்த படியே, கீழே போட ஆரம்பித்தான்.

இரவு முழுவதும் இதனை செய்து, தூங்காமல் விழித்திருந்தான். பொழுது விடிந்தவுடன், தான் அவனுக்கு தெரிந்து, தான் ஏறியது ஒரு வில்வ மரம் என்றும், அவன் கீழே போட்ட வில்வ இலைகள் அனைத்தும் கீழே இலைகளுக்கு நடுவே மறைந்திருந்த லிங்கத்தின் மீது விழுந்தது என்றும். எதையும் எதிர்ப்பார்க்காமல் இப்படி சிவபெருமானை இரவு முழுவதும் வழிபட்டது அவரை குளிரச் செய்தது. அதனால் அவனுக்கு காட்சி அளித்து அருளினார். அதனால் இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிப்படும் பழக்கமும் வந்தது.

இதுவே சிவராத்திரியை பற்றிய சில கதைகள். வட்டாரங்களை பொறுத்து இந்த கதைகள் மாறுபடலாம். ஆனால் இந்த திருவிழாவின் மகத்துவம் மாறுவதில்லை. வறண்ட குளிர் காலம் முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் போது தான் மகா சிவராத்திரி கொண்டாடப்படும். அறியாமையை நீக்கி அறிவுச்சுடரை அனைத்து மனிதர்களுக்கும் ஏற்றுவதே இந்த விழாவின் நோக்கமாகும்.

கடைசி ஆறு மாசம் அவர் கூட பேசலை!- பாலுமகேந்திரா துணைவி மௌனிகா பேட்டி...!



 கடைசி ஆறு மாசங்கள் நானும் கணவர் பாலு மகேந்திராவும் பேசிக் கொள்ளவில்லை. அது தவறோ என்று இப்போது தோன்றுகிறது, என்று கூறியுள்ளார் அவரது துணைவி மௌனிகா. சமீபத்தில் காலமான இயக்குநர் பாலு மகேந்திராவின் மூன்றாவது மனைவி மௌனிகா. பாலு மகேந்திராவுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும், இறுதி நாட்களில் அவருடனான உறவு நிலை குறித்தும் சமீபத்தில் குமுதம் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து...

"பதினெட்டு வயசுல முதன்முதலா அவரைப் பார்த்தேன். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்' படத்துக்கான ஆர்ட்டிஸ்ட் செலக்சன் அது. பாவாடை, தாவணியில் போயிருந்த எங்கிட்ட, "மாடர்ன் டிரெஸ் இருக்கா..?"ன்னார். இல்லைன்னதும் அவரோட பையன் ஷங்கி டிரெஸ்ஸை எடுத்திட்டு வந்து போட்டுக்கச் சொல்லி என்னைப் படம் பிடிச்சார்.

அவரோட பார்வை, பேச்சு, ஆளுமை, அந்தத் தொப்பி எல்லாமே அப்பவே என்னை ஏதோ செஞ்சது. ஆனாலும் ஏற்கெனவே கல்யாணாமான ஒருவர் மேல என்னோட அந்த அபிப்ராயம் தப்புதான். அந்த வயசுக்கே உரிய ஆர்வத்துல புத்திக்கு சரியா தப்பான்னு தெரியாமப் போயிருச்சு. அந்தப் படத்துல ரஜினிக்கு தங்கச்சியா சின்ன ரோல் தந்தார். அத்தோட எங்க உறவு முடிஞ்சிருக்கலாம். விதி யாரை விடும்..?

அடுத்ததா ‘யாத்ரா'ங்கிற மலையாளப் படத்துல வாய்ப்பு தந்தார். அதே படத்தை தெலுங்குலேயும் பண்ணினார். தொடர்ந்து அவரோடவே இருந்த நாட்கள் வயசு வித்தியாசத்தைத் தாண்டி அவரை எந்நேரமும் நினைக்க வைச்சது. என் நினைப்பு அவருக்கும் அரசல் புரசலா தெரிஞ்சிருக்கணும்.

திடீர்ன்னு ஒரு நாள், "எப்ப கல்யாணம் பண்ணப் போற...?"ன்னு கேட்டார். "ஐடியா இல்லை"ன்னு சொன்னேன். "ஏன்.. யாரையாச்சும் லவ் பண்றியா..?"ன்னார். பட்டுன்னு பதில் சொன்னேன், "உங்களைத்தான்"னு. "பைத்தியமா..?"ன்னு கேட்டுட்டு அந்த இடத்துல இருந்து போயிட்டார்.

தொடர்ந்து வாய்ப்பு தந்தா அவருக்கும் நம் மேல பிரியம் இருக்குன்னு நினைச்சேன். அதே போல நடந்த்து.. என்னை விலக்கவும், என்னைவிட்டு அவர் விலகவும் முயற்சி பண்ணலை. இது போதாதா..? தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பிச்சேன். விடாம துரத்தினேன். "எங்கூட வாழணும்ன்னா சில தியாகங்களைப் பண்ணனும்.."னார். அப்பா வயசுல இருக்குற ஒருத்தர் மேல அன்பு வருதுன்னா அது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பு இல்லைங்கிறதை நான் புரிஞ்சுக்கிட்டதால, "எந்த கண்டிஷனுக்கும் ஓகே"ன்னு சொல்லிட்டேன். எனக்கு அவர் கூடவே இருக்கணும். அவ்வளவுதான்..!

அவரோட வாழ ஆரம்பிச்சிருந்த பிறகும், அகிலாம்மா அவங்க வீட்ல ஒருத்தியாத்தான் என்னை நினைச்சாங்க. நல்லது பொல்லதுக்கு அவங்க வீட்ல நான் இல்லாம இருக்க மாட்டேன். என்னோட சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கும் அவங்க வந்து போவாங்க.

அப்படி இருக்கையிலதான் என்னோட தாய் மாமன் ஒருத்தர் இறந்துட்டார். அவருக்கு இரண்டு மனைவிகள். அவரோட உடலை பார்க்க இரண்டாவது மனைவி வந்தப்ப, அங்க சிலர் அவங்களை வரக் கூடாதுன்னு விரட்டினாங்க. எங்கூட அங்க வந்திருந்த இவருக்கு, இந்தச் சம்பவத்தைப் பார்த்ததுல இருந்து மனசு கெடந்து தவிச்சிருக்கு.. எங்கிட்ட கேக்காமலேயே எங்க அம்மாவைக் கூப்பிட்டு, "தாலி எங்க வாங்கணும்..?"னு கேட்டு வாங்கிட்டு வந்துட்டார். இப்ப யாரும் நம்புறாங்களோ இல்லையோ.. இதுதான் உண்மை

நானா அவரை தாலி கட்டச் சொல்லி வற்புறுத்தவே இல்லை. அவர்தான் "உன் நல்லதுக்குத்தான்"னு சொல்லி என்னைப் பேசவே விடலை. அவர் கிறிஸ்டியனா இருந்தாலும் எங்க வழக்கப்படி சிவன் கோவிலுக்கு வந்து என் கழுத்துல தாலி கட்டினார்.

இது எனக்கும் அவருக்குமான முறையான மண வாழ்க்கையா இல்லாட்டியும், ஒவ்வொரு நாளையும் அனுபவிச்சு வாழ்ந்தோம். என்கூட கடைக்கு வருவார். எனக்குச் சமைச்சுத் தருவார். என்னை விதவிதமா போட்டோ புடிச்சு ஷோபா சாயல் உங்கிட்டேயும் இருக்கும்பார்.. பரஸ்பரம் ஒருத்தொருக்கொருத்தர் குழந்தை மாதிரி பாசத்தை பரிமாறி வாழ்ந்தோம்.

எல்லாத்தையும் காலி பண்ணினதும் அந்த மனுஷன்தான். இப்படியே இருந்திட்டுப் போயிடறேன்னு எவ்வளவோ சொன்னேன். கேக்கலை. திடீர்ன்னு ஒரு நாள் பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு "மெளனிகாவும் என்னோட மனைவிதான்"னு சொல்லிட்டார். அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவரோட வீட்டு வாசலை என்னால மிதிக்க முடியலை.. ஆனா, இப்பவும் அகிலாம்மாவும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.

‘சினிமா பட்டறை' ஆரம்பிச்ச பிறகு என்னைவிட்டு விலக ஆரம்பிச்சது போல தெரிஞ்சது. வீட்டுக்கு வர்றது குறைஞ்சது. நான் கேட்டதுக்கு ‘அப்படியெல்லாம் இல்லையே'ன்னார்.

ஆனா, "எனக்குப் பிறகு அவ ஆதரவில்லாம இருக்கக் கூடாது. நான் வெறுத்து ஒதுக்கினா நல்ல முடிவெடுத்து கல்யாணம் பண்ணினாலும் பண்ணிருவா"ன்னு நெருக்கமான ஒருத்தர்கிட்ட சொல்லியிருக்கார். இன்னொரு பெண்ணோட கணவரா இருந்தாலும் இவர்தான் வேணும்ன்னு வந்தவ.. இனிமேல்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனாக்கும்..? ஏதோ அவருக்கு என் மேலான அக்கறை..

இதுக்கிடைல இன்ஸ்ட்யூட்ல படிக்க வந்த இருபது வயசு பெண்ணை தத்தெடுக்கப் போறதா அவர் சொன்னப்ப, அவர்கிட்ட சண்டை போட்டேன். அந்தக் கோபத்துல கடைசி ஆறு மாசமா பேசலை. அதுகூட தப்போன்னு இப்பத் தோணுது. கடைசி நாட்கள்ல பேசாமலேயே போயிட்டாரே..."

ஈழத்தமிழர் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் புலி..!



தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரும் பொருட்செலவில் முதன்முதலாக நிஜ புலியையும், அனிமேஷன் செய்யப்பட்ட புலியையும் வைத்து அதிரடி காட்சிகளுடன் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான படம் பனி விழும் மலர் வனம்.

இயற்கையின் ஆற்றல் எங்கும் பரவி இருக்கிறது என்ற புதுமையான கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் இயற்கை அழகு படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக, திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் அது பற்றி சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு இப்படம் உள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

நிஜப்புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் “Hangover”, “We bought a zoo” போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த புலியினை வைத்து பிரத்யேகமாக கலிபோர்னியாவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டது.

அனிமேஷன் புலியை சென்னையில் உள்ள ஈழத்தவர் நிறுவனமான Raymax நிறுவனத்தினால் அனிமேஷன் செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் மாருதி நந்தன், ரவி இந்திரன் மற்றும் எஸ்.கே. அரவிந்த் ஆகியோர் இப்படத்தினை தயாரித்துள்ளனர். இவர்களை தவிர மேலும் பல ஈழத் தமிழர்கள் இப்படத்திற்கு இரண்டு வருடங்களாக உழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தணிக்கைக் குழுவினரின் பாராட்டுக்களை இந்த திரைப்படம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

பாடலின் சரணம் பாட முடியாமல் மூன்று முறை தவித்த பாலு..!



மூன்று முறையும் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலின் சரணம் பாட முடியாமல் தவித்த பாலு பார்த்தசாரதி சுவாமி சபையின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பாதியில் பாடலை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பாலுவின் குழுவில் டி. எம். எஸ். பாடல்களைப் பாடும் பாடி வாசு, பாலுவிற்குப் பிறகு இரண்டு பாடல்களைப் பாடினார். மேடையிலிருந்து உள்ளே வந்த பாலு தனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை உருவாயிற்று என்று புரியாமல் குழம்பினார்.

இரண்டு பாடல்கள் இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு வந்த பாலு, ரசிகர்களிடம் ‘நான் மீண்டும் பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடப் போகிறேன்’ என்று கூறிவிட்டு பாட்டைப் பாட, பாடல் வெகு நேர்த்தியாக அமைந்தது. ரசிகர்களும் அமோகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்து பாலுவை உற்சாகப் படுத்தினார்கள்.

அதற்குப் பிறகு ஆயிரக் கணக்கான கச்சேரிகள் நடந்து விட்டன. இன்றுவரை அது மாதிரி ஒரு சம்பவம், பாலுவின் கச்சேரிகளில் நடைபெற்றதேயில்லை. அதேபோல், அன்று அந்தக் கச்சேரியில் அப்படி நடந்ததற்குக் காரணமும் புரியவில்லை.

கல்லூரி மாணவராக இருந்து, படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் பாடகரான பாலு கல்லூரியில் கச்சேரி செய்ய வேண்டுமானால், இன்று மிகவும் கவனமாக நடந்து கொள்வார்.

கல்லூரியில் படிக்கும் இளநெஞ்சங்களின் உள்ளங்களை நன்கு அறிந்தவர் பாலு. ஒரு சமயம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம். ஐ. டி. (மெட்ராஸ் இன்ஸ்டியூட் அப் டெக்னாலஜி) மாணவர்கள் தினத்திற்கு கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டிருந்தார். பாலு சினிமாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம்.

கச்சேரியன்று, பாலுவின் குழுவில் பாடிக் கொண்டிருந்த திருமதி சசிரேகாவிற்கு ஒரு சினிமா பாடல் பதிவு ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தது. பாலு தன்னுடைய இசைக் குழுவை இளையராஜாவின் தலைமையில் அனுப்பி விட்டு சசிரேகாவை உடன் அழைத்துக் கொண்டு ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்றார் பாலு.

சினிமா பாடல் பதிவு என்பது சில சமயங்களில் பத்து பதினைந்து டேக்குகள் கூட எடுக்கும். இந்தக் காலத்தில் உள்ளபடி தனித்தனியாக இசையைப் பதிவு செய்து கொள்ளக் கூடிய கருவிகள் அப்போதில்லை. அதனால் ஒரு வாத்தியம் வாசிப்பவர் தவறு செய்தாலும் மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும் அன்று அப்படிப்பட்ட சில தவறுகள் காரணமாக ரிக்கார்டிங் இரவு 7.30 மணிக்குத்தான் முடிந்தது.

பாலு எம். ஐ. டி. போய்ச் சேரும்போது மணி இரவு 8.15. மாணவர்கள் கோபத்திலிருந்தார்கள். அவர்களை விட மேலும் அதிகமான கோபத்தோடு பாலுவை வரவேற்றார் இளையராஜா. மேடைக்குச் சென்றார் பாலு பல திக்குகளிலிருந்து காகித அம்புகள் பறந்தன. மாணவர்களின் நியாயமான கோபத்தை மதித்து மெளனமாக இருந்தார் பாலு. ஒரு மாணவன் ஒரு முழு அப்பிளைத் தூக்கி பாலுவை நோக்கி எறிய, பாலுவிற்கு பள்ளி நாட்களில் விளையாடிய கிரிக்கெட் உதவி செய்தது.

அப்பிளை கெட்ச் பிடித்தார். பாலுவின் இந்தச் செய்கைக்கு மாணவர்களிடமிருந்து ஒல்ரவுண்ட் கைதட்டல் கிடைத்தது. உடனே பாலு மைக்கில் ‘இசை நிகழ்ச்சிக்குப் பிறகு டின்னர் சாப்பிடும் நேரத்திற்குத் தான் நான் வந்திருக்கிறேன். நான் பசியோடுதான் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு என்னுடைய நண்பர் எனக்கு அப்பிளைக் கொடுத்திருக்கிறார்.

அதற்கு நன்றி இதைச் சாப்பிட்டுவிட்டு அனைவரும் போதும் போதும் என்று சொல்லும் வரை பாடுகிறேன்’ என்று கூறி அப்பிளைக் கடித்துச் சாப்பிட நிலைமை சற்று அடங்கியது. அவ்வளவுதான் அன்று இரவு பன்னிரண்டு மணி வரை பாலுவும், அவர் இசைக் குழுவும் பாடி மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். கச்சேரி முடிந்ததும் அப்பிள் வீசிய மாணவர் பாலுவைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அதற்கு பாலு என்ன சொன்னார் தெரியுமா?

தம்பி நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க, அப்பிள் அடிப்பதோடு நிறுத்திக் கொண்டீங்க. உங்கள் கோபத்தில் அப்பிளுக்குப் பதிலாக கல்லை எறிந்தால் கூட நான் உங்களிடம் கோபித்துக் கொண்டிருக்க முடியாது.’

அன்றிலிருந்து இன்றுவரை மாணவர்களுக்காக நடக்கும் கச்சேரி என்றால் பாலு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். மற்றொரு முறை மாணவர்கள் மத்தியில் மறக்க முடியாத சண்டை செய்துள்ளார் பாலு. சண்டை யாருடன் தெரியுமா?

பிரபலமான இயக்குநர் பாரதிராஜாவுடன் தான் சண்டை. நடந்த இடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதி. ‘பாரதிராஜாவுக்கும், எஸ். பி. பி.க்கும் சண்டை வருவானேன்?’ என்கிறார்களா?

மர்மமான ராஜீவ் மரணம்..? மறைக்கப்பட்ட , விடை இல்லா கேள்விகள்..?



இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...?

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

4. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

5. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

6. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

7. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

8. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா .பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

9. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

10. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

11. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

12. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

13. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
14. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!

15. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?சிவராசனும்,தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை.

16. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

17. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

18. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

19. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

20. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

21. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

22. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகிய மூவரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?

23. அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?

24. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் "இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார்" என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?

24-எ ).திருச்சி வேலுசாமி கூற்றுபடி சுப்ரமணிய சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே இராஜீவ் கொலைசெய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை.

25. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கிய கோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திராசாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்ம ராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?

26. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீ பெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்?

27. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

28. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

29. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

30. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

31. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?

32. ராஜிவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

33. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணிய சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?

34)தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்தபோதும் ,டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்குதான் நடத்தியாகவேண்டும் என கூறியது,எப்படி என்று விசாரிக்கப்பட்டதா?

35. பெல்ட் பாம்(வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவேயில்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக சொல்லி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் - சிம்ரன்..!



ரஜினியுடன் விரைவில் நடிக்கப் போவதாக சிம்ரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

தமிழில் கமல், விஜய், அஜீத், எஸ்.ஜே.சூர்யா என நிறைய ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு கிட்ட வில்லை.

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. விரைவில் ரஜினியுடன் நடிப்பேன்.

விஜய் எனக்கு பிடித்த நடிகர். நாங்கள் ஜோடியாக நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளது. படங்களில் எங்கள் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது.

விஜய்யுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என்றும் நினைவில் இருப்பவை.

அஜீத்துடன் நடித்ததும் இனிமையான அனுபவம். அவர் ஒரு ஜென்டில்மேன். வாலி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் அஜீத்துடன் நடித்தேன்.

கதை வித்தியாசமான இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். கமல்ஹாசன் அவரோடு நடிக்கும் நடிகைகளுக்கு உதவுவார்.

கமலுடன் நடித்த படங்கள் காமெடி கதையம்சம் உள்ளவை. எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் இன்னும் எனக்கு வரவேற்பு தருகிறார்கள்.

ஓட்டல்களுக்கு சாப்பிட செல்லும் போதும் ஷாப்பிங் போகும் போதும் என்னை சூழ்ந்து கொண்டு பேசுகிறார்கள்.

திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக போகிறது. என் கணவர் தீபக் நல்ல நண்பராக இருக்கிறார்.

இவ்வாறு சிம்ரன் கூறினார்.