Tuesday 18 February 2014

வில்லியாக புது அவதாரம் எடுத்த தமன்னா..!




வாழ்நாளில் ஒரு முறையாவது வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார் தமன்னா. தமன்னாவுக்கு இது மந்த காலம்தான். தமிழில் நீண்ட இடைவெளிக்குபிறகு வீரம் படத்தில் நடித்தார். வேறு தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை.

படுபிஸியாக இருந்த டோலிவுட்டிலும் தற்போது ஆகடு என்ற படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடிக்கிறார். அனுஷ்கா நடிக்கும் பாஹுபாலி படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார். இந்தியில் சாஜித் கான் இயக்கும் ஹம்ஷகல் என்ற காமெடி படத்திலும், அக்ஷய் குமார் நடிக்க ஃபராத் சாஜித் இயக்கும் மற்றொரு காமெடி படத்திலும் நடித்து வருகிறார்.

ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி தமன்னாவுக்கு அலுத்துவிட்டதாம்.

இனிமேல் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இதுபற்றி அவர் கூறும்போது, ஹீரோயினாக பலவித கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். வாழ்நாளில் ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment