Tuesday 18 February 2014

ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் பயன்பாடு குறைகிறது..!



பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் மட்டும் சுமார் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்படுத் துவோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதனால் ஸ்மார்ட் போன்  விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிலும் மலிவுவிலை ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு, சாமானிய  மக்கள் கூட சாதாரண போன்களை விட ஸ்போர்ட் போன்கள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது.
 ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத ளங்களையும், வாட்ஸ்அப் போன்ற உடனடி தகவல் தொடர்பு ‘ஆப்‘களையும் பயன்படுத்துகின்றனர்.

இதனால், கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவதை விட, ஸ்மார்ட் போன்கள் மூலம் இன்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். இவர்களை மையமாக வைத்து தனியார் தொலை தொடர்பு  நிறுவனங்கள் மாதாந்திர இன்டர்நெட் பேக்கேஜ்கள் வைத்துள்ளனர்.

 நிறுவனத்துக்கு தகுந்தபடி 24 ரூபாயில் இருந்து தொடங்கி ரூ.700, ரூ.800 என 2ஜி, 3ஜி இன் டர்நெட் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது வாடிக்கையாளர்களை கவரும்  விதமாக 2ஜி, 3ஜி இரண்டில் எதை பயன்படுத்தினாலும் ஒரே கட்டண விதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தனியார் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்  எண்ணிக்கை 400 மில்லியனாக இருக்கும் என, மொபைல் ‘ஆப்ஸ்‘கள் உருவாக்கும் நிறுவனம் ஒன்று  கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் போன் ஆப்ஸ்கள் மூலம் கணிசமான வருவாய் வருவது கு றிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் போன்கள் மூலம் டுவிட்டர், பேஸ்புக் பயன்படுத்துவது அதிகரித்து வந்தாலும், வங்கிகளும்  சேவையை எளிதாக்கும் வகையில் தங்கள் ஆப்ஸ்களை வெளியிட்டுள்ளன. இருப்பினும், பாதுகாப்பு த ன்மையை கருத்தில் கொண்டு இதை பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை. இருப்பினும் ஸ்மார் ட்போன் மூலமான பேஸ்புக், டுவிட்டர் பயன் பாடு அதிகரித்திருப்பது,  ஸ்மார்ட் போன் விற்பனை  அதிகரித்திருப்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

இருப்பினும், ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஏலத்தில் அரசுக்கு ரூ.61,162 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  ஏலத்துக்கு அதிக தொகை ஒதுக்கியதால், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை  உயர்த்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வு உடனடியாக இல்லாவிட் டாலும், வருங்காலத்தில் அதிக அளவு நிர்ணயிக்கப்பட்டால் ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக், டுவிட்டர்  பயன்படுத்துவோர், இன்டர்நெட் பயன்படுத்துவோர் அதிக பணம் செலவிட வேண்டி வரும்.

0 comments:

Post a Comment