Tuesday 18 February 2014

சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்த விருது...!



எடிசன் திரைப்பட விருதை வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவ கார்த்திகேயன். அடுத்து ‘மான் கராத்தே’ படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம்.

நீங்கள் நடித்த எல்லா படங்களுமே ஒரே வகைப்படங்களாகவே இருக்கின்றதே?

‘எதிர்நீச்சல்’ மாறுபட்ட படம் என்று நினைக்கிறேன். சவாலான பாத்திரங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

ஆனால் அதற்கு சிறிது கால அவகாசம் தேவை. எனக்கு நகைச்சுவை நன்றாக வரும் என்ற பிம்பத்தை தொலைக்காட்சி கொடுத்திருக்கிறது.

அதை உடைத்துக்கொண்டு வெளியே வர சிறிது காலம் பிடிக்கும். எனது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எனது நகைச்சுவையில் கலகலப்பான நடிப்பைத்தான் பார்க்க வருவார்கள்.

இன்னொரு விஷயம், திரையில் கலகலப்பாக நடிக்கும் நாயகர்கள் தான் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ரஜினி சாரை பாருங்கள்.” தனுஷுடனான ஆழமான நட்பு எப்படி சாத்தியமானது? “முன்பு ‘3’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னதே அவர் தான்.

இவன் பெரிய நடிகனாக வருவான் என்ற நம்பிக்கை அவருக்கு அப்போதே இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் என்னை வைத்து ‘எதிர்நீச்சல்’ படம் தயாரித்தார்.

சொந்த அண்ணனுடன் பழகுவது போல பயம் கலந்த மரியாதையுடன் தான் பழகுவேன்.

உடன்பிறவா அண்ணனாக அவர் இருந்தாலும், சார் என்று தான் அழைப்பேன்.

அது அவரது திறமைக்கு நான் கொடுக்கும் மரியாதை. அவருடனான நட்பை வைத்து என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நான் என்றுமே நினைத்ததில்லை.

 சில உறவுகள் அதுவாக அமையும். தனுஷ் சார் எனக்கு அப்படி.”

0 comments:

Post a Comment