Sunday 16 February 2014

மக்கள் என்ன முட்டாள்களா..?திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு..!



திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசும்போது கடுமையாக சாடிப் பேசினார். அவரது பேச்சில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவாலும் விட்டார்.

 உணர்ச்சிகரமாக பேசிய குஷ்புவின் பேச்சில் கொதிப்பு தெறித்தது.. கொந்தளிப்பு துடித்தது... முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசுகையில் அவரது நாடி நரம்பு புடைக்க ஆவேசமாகப் பேசினார்.

அந்த ஆவேசத் துளியிலிருந்து சில...

ஆதிக்கம் செலுத்துறாங்க அம்மையார். நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறாரு. யாருக்கும் எதுக்கும் நாம பயப்படவேண்டாம். எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது. அத்தனையையும் பொய் என்று நிரூபிப்போம்

வெற்றி திமுகவுக்கு மட்டும்தான். போன தேர்தலில் தமிழ் மக்கள் அவுங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தது போதும்.

அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவுங்களுக்குத்தான்னு நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். வெற்றி திமுகவுக்குத்தான். 40 சீட்டை தலைவருக்கு கொடுத்துப் பாருங்கள்

அம்மா உணவகமா? தமிழ்நாட்டுல எத்தனை குடும்பங்கள் இருக்கு. அத்தனை பேருக்கும் சோறுபோட முடியுமா?

மக்கள் என்ன முட்டாள்களா உங்களை நம்புவதற்கு? என்று கோபமாகக் கேட்டார் குஷ்பு.

0 comments:

Post a Comment