Sunday 16 February 2014

சிறுமியை பலாத்காரம் செய்த மாநகராட்சி ஊழியர் கைது..!



ஆலந்தூர்:சென்னை பரங்கிமலை நரசத்புரம் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் வரதராஜ் (41). இவர் மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவரது மகளுடன் விளையாடுவதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று வரதராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வரதராஜ், அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றிருக்கிறாள். அவளது உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி சிறுமியின் பெற்றோர் கேட்டபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதற்கிடையில் வரதராஜ் தலைமறைவாகிவிட்டார்.

இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து தலைமறைவாக இருந்த வரதராஜை கைது செய்தனர். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment