Sunday 16 February 2014

தமிழினப் படுகொலைக்கான புதிய ஆதாரத்தை வெளியிடுகிறது “சேனல் 4′..!



“தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் கற்பழித்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை. மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது.

இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும்.”

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,2009-ஆம் ஆண்டு இலங்கை போரின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. தமிழ்ப் பெண்கள் 15 பேரை இலங்கை ராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்துள்ளனர்.

சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகின்றனர்.இந்தக் கொடிய சம்பவம் சேனல்- 4 தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் இலங்கை அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment