Friday 21 March 2014

பள்ளி செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல் சிறப்பா இருக்கணும்னா...?




பள்ளி செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல் சிறப்பா இருக்கணும்னா மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை வழங்குவது நல்லதுன்னு நிபுணர்கள் சொல்கிறார்கள்..

ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, நெல்லி நாவல் பழம் ஆகிய பழங்கள் மூளைக்கு தேவையான அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்டும், வைட்டமின் ‘சி’யும் வழங்குகின்றதாம்...

 இவற்றில் இருக்கிற ஓமேகா-3 என்கிற சத்து மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது என்று சொல்கிறார்கள்..

ஓமேகா 3 மீன்களில் அதிகம் உள்ளதால் வாரம் இருமுறை குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாம்.

மூளையின் ஞாபகசக்தியை வளர்க்கும் சத்துகளில் முக்கியமானதாக சொல்வது கோலைன்.

இந்தச் சத்து முட்டையில் அதிகம் இருக்கிறதாம். இதை அதிகம் உண்டால் ஞாபகசக்தி அதிகரிக்குமாம்..

மேலும் மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுமாம்...

0 comments:

Post a Comment