Saturday 15 February 2014

இசையை விட்டுக்கொடுக்காத ஜி.வி.பிரகாஷ்குமார்..!



வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார். அப்போதில் இருந்தே அவருக்குள் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்து கொண்டேயிருந்திருக்கிறது. அதன்காரணமாகவே, மதயானைக்கூட்டம் என்ற படத்திலேயே ஹீரோவாக நடிப்பதாக இருந்தார் ஜி.வி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த மதுரை மண்வாசனை கதை உங்களுக்கு செட்டாகாது என்று சிலர் சொல்லப்போக, முன் வச்ச காலை பின் வைக்க வேண்டாம் என்று வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தில் தான் தயாரிப்பாளராக மட்டும் இருந்தார். அதோடு தான் இசையமைப்பாளராக இருந்தும் ரகுநந்தனை இசையமைக்க வைத்தார்.

அதன்பிறகு பென்சில் கதையை கேட்டு முடிவெடுத்தார். ப்ளஸ் டூ மாணவன் கதை என்பதால், அது ஜி.வி.பிரகாசுக்கு பொருந்தி விட தனது உடல் எடையை குறைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு இசையமைக்கவும் ரகுநந்தனையே புக் பண்ணலாமா என்று கேட்டபோது, மறுத்து விட்டாராம் அவர்.

காரணம், நான் எந்த படத்திற்கு இசையமைத்தாலும் அதில் என்னையே ஹீரோவாக கொண்டுதான் செயல்படுவேன் அப்படியிருக்க, இது நான் நடிக்கிற படம். அதனால் நானே இசையமைக்க வேண்டும். அப்போதுதான் நான் அனுபவித்து நடிக்க முடியும் என்று சொல்லி விட்டாராம். அதோடு, இனி நான் நடிக்கும் எல்லா படங்களுக்கும் நானே இசையமைப்பேன் என்றும் கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

0 comments:

Post a Comment