Saturday 15 February 2014

'கடல் தந்த காவியம்' உண்மை சம்பவம் படமாகிறது..!



வேளா எண்டர்பிரைஸ் சார்பில் தயாராகியுள்ள படம் 'கடல் தந்த காவியம்'. இப்படத்தில் படத்தின் நாயகன் அப்ரஜித், நாயகி அசுறதா, இவர்களுடன் எஸ்.காந்திமதி, உஷா, விமலா, அனுப்ரியா,கருணா, காளி, மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சரத்ப்ரியதேவ் இசையமைக்கும் இப்படத்ஹிர்கு சகாயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குவதோடு இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் பிரகாஷ் ஜியோ.

படத்தைப் பற்றி கூறிய இயக்குனர் பிரகாஷ் ஜியோ, "நெல்லை அருகில் உள்ள வடக்கன்குளத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் பரலோக மாதா. இந்த மாதா கோவில் சரித்திர புகழ் பெற்றதாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கன்குளம் கடுமையான பஞ்சத்தில் சிக்கியது. அப்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் ஊர் மக்கள் தவித்தபோது பெண் வடிவில் வந்த மாதா தன கையால் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி மக்கள் தாகத்தை போக்கியதால வரலாற்று செய்தி கூறுகிறது.

அந்த நீர் ஊற்று இன்றளவும் அங்கு பயன்பாட்டில் உள்ளது. இங்கு மற்றொரு அற்புதம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 8ஆம் தேதி பகல் 12 மணி அளவில் சூரிய ஒளியானது மாதாவின் கால் முதல் தலை வரை பதிந்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இப்படிப்பட்ட்ட மாதாவின் சிறப்புகளை மையப்படுத்தி ' கடல் தந்த காவியம்' உனர்வூப்பூர்வமாக தயாராகியுள்ளது.

படத்தின் பெரும் பகுதி பரலோக மாதா தேவாலய பகுதிகளிலேயே உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 18ஆம் தேதி, புனித வெள்ளியன்று 'கடல் தந்த காவியம்' வெளியாகிறது." என்று தெரிவித்தார்...


0 comments:

Post a Comment