Saturday 15 February 2014

நாம் வாங்கும் ஐந்து மருந்து/மாத்திரைகளில் ஒரு மருந்து போலியானது..!



இந்தியாவில் போலிகளுக்கு பஞ்சமில்லை; சாதாரண சோப்பில் இருந்து எல்லா பொருட்களையும் கள்ளத்தனமாக தயாரித்து, விற் பனை செய்வதில் பல நூறு கோடிகளை முதலீடு செய்வோர் உள்ளனர்.ஆனால், மனித உயிருடன் விளையாடும் போலி, கலப்பட மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடுவோர் அதிகரிப்பது தான் வேதனை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது; கலப்படமானது என்று அண்மையில் எடுக்கப் பட்ட சர்வேயியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி மருந்து மாத்திரைகள் என்றதும் அது அரசாங்கத்துக்குத் தெரியாமல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். மருந்து நிறுவனங்களின் கள்ள சந்தையே போலி மருந்து, காலாவதி மாத்திரைகள் எல்லாம்.டாக்டர்கள் மத்தியிலும் போலிகள் உருவாவது அவ்வப்போது நடப்பதால் தான், பலரும் சாதா கோளாறுகளுக்கு எல்லாம் மருந்துக்கடையையே நாடுகின்றனர். தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு டாக்டரிடம் போக மறுப்பவர்கள் தான் போலி மருந்துகள் புழங்க இடம் தருகின்றனர்.மருந்துச்சீட்டு வாங்கி தான் மருந்து வாங்க வேண்டும் என்பது கூட இன்னும் பலருக்கு தெரியவில்லை.

இதற்கிடையில் எந்த ஒரு மருந்தும் நாளடைவில் வைத்துக்கொள்ளவே கூடாது; மருந்து பாக்கெட், பாட்டிலில் , காலாவதி நாள் மட்டுமல்ல, பாதுகாப்பு, பராமரிப்பு ஆலோசனையும் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இவற்றை பெரும்பாலோர் பார்ப்பதே இல்லை. என்ன மாத்திரை எழுதினார் டாக்டர், அது சரியாகத்தான் கடைக் காரர் தந்திருக்கிறாரா, என்ன மில்லி கிராம் என்பதை எல்லாம் கண்டிப் பாக கவனிங்க இனியாவது.

பொதுவாக, சில மருந்துகள், மிதமான வெப்பத்தில், சூரிய வெளிச் சம் படாமல் பாதுகாக்க வேண்டும்; சில மருந்துகள் 59 முதல் 80 டிகிரி வெப்பத்தில் வைத் திருக்க வேண்டும்; இதற்காக இருட்டான இடத்தில் வைப்பது நல்லது. சமையல் அறை, குளியல் அறை தவிர, மற்ற அறையில், அலமாரியில் வைத்து மூடி வைப்பதே நல்லது. சில மருந்துகள் பிரிஜ்ஜில் வைத்து குளிர்பதன நிலையில் வைத்திருக்க வேண்டும். வீட்டில் பிரிஜ் இல்லாதவர்கள், கடையில் அவ்வப் போது வாங்கி பயன்படுத்துவதே சரியானது.

சில மருந்துகள் விஷத்தன்மை வாய்ந் தவை; குழந்தைகள் தவறுதலாக எடுத்து விடாமல் அவர்கள் கைபடாத இடத்தில் பாதுகாப்பது முக்கியம். மருந்து காலாவதி ஆகாமல் கண்காணிக்க, மருந்தை அதே பாட்டிலில், பாக்கெட்டில் வைத்து பயன் படுத்துவது நல்லது. அப்போது தான் காலாவதி தேதியை பார்த்து வரலாம்.

மருந்துக்கடைகளில் வாங்கும் தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சாதா கோளாறுகளுக்கு வாங்கும் மருந்துகள் காலாவதி ஆகும்; அதுபோல, டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துகளும் குறிப்பிட்ட காலத்துக்கு பின் பயன்படுத்தவேகூடாது. கருத்தடை மாத்திரைகள், காண்டம்கள், காய்ச்சல் மருந்து, வலி நிவாரணி மருந்துகள், அலர்ஜி மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆன்டிசெப்டிக் ஆயின்ட் மென்ட்கள் ஆகியவையும் இந்த பட்டியலில் அடங்கும்.

காலாவதி ஆன மருந்துகளை பயன்படுத்துவதால் ஆபத்தா என்று பலருக்கும் சந்தேகம். அவரவர் உடல் நிலையை பொறுத்தது; குறிப்பிட்ட சில கோளாறுக்கான மருந்துகள், செயலற்றதாகி விடும்; சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; அதனால் தான் ஆபத்து நேர்கிறது.

மருந்துகளில் உள்ள சில துணை ரசாயன பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதுவும் குழந்தைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும்.

கண் மருந்து விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலை திறந்து வைக்கவே கூடாது. ‘ட்ராப்ஸ்’ போடும் போது, கடைசியாக போட்ட துளிகளில் இருந்து தேங்கிய மருந்தை துடைத்து, சுத்தமான பின், புதிய ‘ட்ராப்’ போட வேண்டும். மற்ற மருந்துகளை விட, கண் ‘ட்ராப்’ பாட்டில்களை உடனுக்குடன் மூடி வைத்து விட வேண்டும்; சூரிய ஒளிபடாமல் வைப்பதும் முக்கியம்

0 comments:

Post a Comment