Saturday 15 February 2014

நிறைவடைந்தன யான் படப்பிடிப்புகள்..!



ஜீவா - துளசி நடிப்பில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் யான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் யான் திரைப்படத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த வருடத்தின் ஆரம்ப நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கின. இந்தியாவில் படம்பிடிக்கவேண்டிய அனைத்துக் காட்சிகளும்
படமாக்கப்பட்டபின்னர் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதமிருந்தன. மொராக்கோ செல்வதற்கான கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு கடந்த ஜனவரியில்தான் படக்குழு மொராக்கோ பறந்தது. தற்பொழுது மொராக்கோவில் படமாக்கப்படவேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால் யான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விரைவில் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துவங்கவுள்ளன.

யான் படத்தில் ஜீவா, துளசி மட்டுமல்லாது ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தானம், நாசர், ஜெயப்பிரகாஷ்,
பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment