Saturday 15 February 2014

ஒரு படத்துக்கு பட்ஜெட் முக்கியமல்ல, கரு தான் முக்கியம்! - வெற்றிமாறன்


பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதன்பிறகு சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை இயக்கயிருந்தார். ஆனால் என்ன காரணமோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதனால் அடுத்து படம் இயக்குவதை தவிர்த்த வெற்றிமாறன், உதயம் என்எச்4 படத்தை தயாரித்தவர், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி படத்தை மைக்கேல் ராயப்பனுடன் இணைந்து தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு படங்களை தனுஷை வைத்து இயக்கிய வெற்றிமாறன், மீண்டும் அவரை வைத்து தற்போது இன்னொரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவரிடத்தில் இன்றைய தருவாயில் படங்களின் வெற்றிக்கு எது முக்கியமானது? என்று கேட்டால், இன்று மட்டுமல்ல எந்த காலத்திலும் ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் கரு தான் முக்கியம். நல்ல கதைகள் மட்டுமே வெற்றியை கொடுக்கும். அந்த மாதிரி படங்களே பெரிய படங்கள். மற்றபடி பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை நான் பெரிய பட்ஜெட் என்று நினைப்பதில்லை. கதைகளின் தரம் மட்டுமே என்றைக்குமே உயர்ந்தது.

அதோடு, சிலர் சிறிய நடிகர்கள் நடித்த படங்களை சின்ன படங்கள் என்கிறார்கள். ஆனால் நிறைய சின்ன படங்கள்தான் நல்ல கதையுடன் வருகின்றன. வெறும் பிரமாண்டத்தை மட்டும் தாங்கி வரும் படங்களை விட சிறிய நடிகர்களால் பெரிய கதையுடன் வரும் படங்களே என்னைப்பொறுத்தவரை பிரமாண்ட படங்கள் என்றும் சொல்கிறார் வெற்றிமாறன்.

0 comments:

Post a Comment