Saturday 22 March 2014

வெட்டி சீனெல்லாம் போடல ப்ரோ - சிவகார்த்திகேயன்..!




மான் கராத்தே திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபமாகச் சென்னையில் நடைபெற்றது. சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்ற இவ்விழாவில் சிவகார்த்திகேயனைச் சுற்றிலும் சுமார் 50 பவுண்சர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் சிவகார்த்திகேயனைச் சந்திக்க நினைத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர ஊடகங்களைச் சார்ந்த அனைவருமே பவுண்சர்களால் தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் மேல் கடும் விமர்சங்கள் எழுந்தன.

ஆடியோ வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் திருக்குமரன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பத்திரிக்கையாளர்கள் படத்தினைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனரும், தயாரிப்பாளரும் பதிலளித்தனர்.

படத்தினைப் பற்றிய கேள்விகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயனிடம் ” பவுண்சர்களை வைத்துக் கொண்டு ஏன் எங்களைக் கஷ்டப்படுத்துனீங்க?” என்று கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன் தனக்குப் பவுண்சர்களை நியமிக்கும் அளவிற்கு வசதி இல்லையென்றும், இந்த விழாவிற்குக் கூட தான் தனியாகத்தான் வந்திருப்பதாகவும், 50 பவுண்சர்களை நியமிக்கும் அளவிற்குத் தனக்கு வசதியில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த மான் கராத்தே திரைப்படத்தின் தயாரிப்பாளர் மதன், இசைவெளியீட்டு விழாவில் கூட்டம் ஏற்பட்டு அதனால்
ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே தான் பவுண்சர்களை நியமித்ததாகவும், ஆனால் அதுவே பிரச்னையாகும் என்று தான் நினைக்கவில்லை என்றும், இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்த அவர், இந்தத் தவறுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டாராம்.

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் மான்கராத்தே திரைப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment