Monday 17 February 2014

தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம்..!



தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம் இருப்பதாக பத்மப்பிரியா கூறியுள்ளார். தமிழில், ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்‘, ‘பொக்கிஷம்‘ உட்பட சில படங்களில் நடித்தவர் பத்மப்பிரியா.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அவர் மலையாள இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம். கால்ஷீட் கேட்பார்கள். கொடுப்பேன். அட்வான்ஸ் வாங்கிய பிறகு உங்களுக்கு இந்த கேரக்டர் செட் ஆகாது என்று சொல்லி விடுவார்கள். இதனால்தான் தமிழில் எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் அதிக நாள் நீடித்திருப்பது கஷ்டம். இவ்வாறு பத்மப்பிரியா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment