Monday 24 March 2014

முடி உதிர்கிறதா..? பொடுகு தொல்லையா..? இதோ தீர்வு டாஸ்மார்க் கடைகளில்..




கிக் இற்காக இன்றைய இளசுகள் பீருக்கு அடிமைப்பட்டுள்ளனர். பீரினால் கிக் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.
காரணம், பீர் ஆனது தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக இருப்பதாக விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

பீரில் முடிக்கு செழுமை அளிக்கக்கூடிய விற்றமின்களும், புரதங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

பீரில் உள்ள விற்றமின் பி ஆனது தலைமுடிக்கு சிறந்த மென்மையை அளிக்கின்றது.

அத்துடன் பீரில் காணப்படும் பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை தலைமுடிக்கு உறுதி அளித்து முடி உதிர்வு, முடி சிதைவு, பொடுகு தொல்லை என்பவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.
எப்படி பயன்படுத்துவது..?

பீரை குடிப்பதால் இந் நன்மைகளை பெற்றுவிட முடியாது. அதனை நேரடியாக தலையில் பூசவேண்டும்.

01. முதலில் பீரை திறந்து அதில் வாயுகுமிழிகள் வெளியேறி முடியும் வரை காத்திருக்கவும். (இதில் முக்கிய விடயம், பீர் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும்.)

02. பின்னர் தலைமுடியை ஷம்பூ போட்டு நீரினால் நன்கு அலசவும்.

04. அதன் பின்னர் பீரை தேவையான அளவு தலையில் ஊற்றி, விரல்களால் 5 நிமிடங்களுக்கு குறையாமல் மசாச் செய்யவும்.

05. இறுதியாக தலைமுடியை நீரினால் கழுவி, தேவை ஏற்படின் மீண்டும்
ஒருமுறை ஷம்போ போட்டு கூந்தலை லேசாக அலசலாம்.
குறிப்பு: இதில் எவ் இடத்திலும் சூடான நீரை பயன்படுத்த வேண்டாம்.

பீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்?

01. தலைமுடி நன்கு பிரகாசிக்கும்

02. தலைமுடி மென்மையாக இருக்கும்

03. தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்

04. தலைமுடியின் உறுதி அதிகரிக்கும்

05. முடிஉதிர்தல், பொடுகு பிரச்சினை முடிவுக்கு வரும்.

பீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன தீமை..?
பீர் வாசனை அன்று முழுவதும் உங்கள் தலையை சுற்றிவரலாம்..!
(பீரை பயன்படுத்திய பின்னர் வாசனையான ஷம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசுவதால் இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.)

இவ்வாறு வாரத்துக்கு ஒருமுறை தலைமுடிக்கு பீரை பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

0 comments:

Post a Comment