Friday 7 February 2014

சூது கவ்வும் குழுவின் அடுத்த படம் ‘தெகிடி’ -மினி ஆல்பம்..!



புதுமுக இயக்குனர்களை வைத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார்.

இந்த இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் படங்கள் வெற்றி பெற்று மக்களிடையே பேசப்பட்டது.இதையடுத்து இவர் தற்போது ‘தெகிடி’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

சூது கவ்வும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தினேஷ், எடிட்டராக வேலை செய்த லியோ ஜான் பால் மற்றும் நடிகர் அசோக் செல்வன் ஆகியோர் இந்த படத்தில் இணைகின்றனர்.

அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக நடித்தவர். இவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க பி.ரமேஷ் இயக்குகிறார்.

0 comments:

Post a Comment