Friday 7 February 2014

மீகாமன் படத்துக்காக பிரம்மாண்ட சண்டை காட்சி..!



ராஜாராணி, ஆரம்பம் வெற்றி பிறகு ஆர்யாவின் சினிமா கிராப் சற்று உயர்ந்து கொண்ட போகிறது .

தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கும் ஆர்யா, இதுவரை காணாத ஒரு கதாபாத்திரத்தில் வருவர் என்று தெரிவித்து உள்ளனர்.

இப்படத்தை பொறுத்து வரை பட்ஜெட்டை பற்றி கவலை படாமல் தாராளம் கட்டி வருகிறார் ஹிதேஷ் ஜபக்,சமிபத்தில் இப் படத்துக்காக பின்னிமில்லில் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படம்மாக்கி உள்ளனர்

இயக்குனர் இப் படத்தை பற்றி பேசுகையில், கொன்றை வேந்தன் செய்யுளில் வரும் வார்த்தை தான் மீகாமன். தமிழ் படத்தை எடுக்கும் நான் தலைப்பும் தமிழிலே இருக்க ஆசைப்படறேன். கதைக்களம் கோவா, குஜராத், சென்னை என்று படம் பயணிக்கிறது.

இது ஒரு அக்ஷன் திரில்லர் கதை. ஒரு மனிதனின் விளையாட்டு என்று கூட இந்த கதையை சொல்லலாம். ஒரு மனிதன் ஒரு காரியத்தை கையில் எப்படி எடுத்து, எப்படி முடிக்கிறான் என்பதை மிகசிறப்பாக கதை ஆக்கியுள்ளேன்.

இதற்காக ஆர்யாவின் லுக்கை கொஞ்சம் மாற்றம் செய்ய இருக்கிறேன்படத்திற்கு ஒளிப்பதிவு-சதீஷ். இசை-தமன். முதல் ஷெடியுலில் ஹீரோயின்இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment