Friday 7 February 2014

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை..!



சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 88.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

இதையடுத்து மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது 50 பில்லியன் டாலராக குறைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிதி அமைச்சகத்திற்கு தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த நிதியாண்டின் (மார்ச்) இறுதிக்குள் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது இருக்கும் அளவில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என நிதித்துறை இணை மந்திரி ஜெ.டி. சீலம் மக்களவையில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment