Thursday 6 February 2014

சசிகுமார் படத்தில் ஆண்ட்ரியா..!



பிரம்மன்’ படத்தில் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடவிருக்கிறார் ஆண்ட்ரியா. சசிகுமார், லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் வளர்ந்து வரும் படம் ”பிரம்மன்”. இந்த படத்தை கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த “சாக்ரடீஸ்” இயக்கி வருகிறார்.

இதில் குத்துப்பாடல் ஒன்றிற்கு நடனமாட நடிகை ஆண்ட்ரியாவிடம் கேட்கப்பட்டதாம். முதலில் அவர் நடனமாடுவதற்கு மட்டுமே அழைக்கப்பட்டராம். ஆனால் ஆண்ட்ரியாவோ சம்மந்தப்பட்ட பாடலையும் தானே பாடுவதாக கூறி இரண்டுக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார்.

முதலில் யோசித்த தயாரிப்பாளர் வேறு வழியின்றி இயக்குனரின் பிடிவாதத்தால் அந்த தொகையை கொடுக்க சம்மதித்து விட்டாராம். சமீபத்தில் தமிழில் வெளியான ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.

மேலும் காமெடியில் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் சந்தானமும், சூரியும் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்து காமெடி செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் சேர்ந்து நடிப்பது போல ஒரு காட்சி கூட படத்தில் இல்லையாம். முதல் பாதியில் சந்தானமும், பின் பாதியில் சூரியும் வருகிறார்களாம். படத்திற்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

0 comments:

Post a Comment