Thursday 6 February 2014

முடக்கத்தான் கீரை சூப் - ட்ரை பண்ணி பாருங்க...!




தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் இலை - 1 கட்டு

வெங்காயம் - 1

தக்காளி - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

சோள மாவு - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ப.மிளகாய் - 2

செய்முறை :

• வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முடக்கத்தான் இலை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

• இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.

• கடைசியாக இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இறக்கவும்..

• 48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.  

0 comments:

Post a Comment