Thursday 6 February 2014

காளி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு...!




ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, கொல்கத்தா காளி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

புதிய படம்

‘ஜில்லா’ படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ‘துப்பாக்கி’ படத்துக்குப்பின், விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் இணையும் இரண்டாவது படம் இது.

‘துப்பாக்கி’ படத்தைப்போல் இதுவும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படம். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை ஏ.ஆர்.முருகதாசே எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுதான் முதல் முறை.

சமந்தா

இந்த படத்தில், விஜய்யுடன் சமந்தா ஜோடி சேருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதும் இதுதான் முதல் படம்.

சமந்தா இப்போது லிங்குசாமி டைரக்ஷனில், சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்ததும் அவர், விஜய் நடிக்கும் படத்துக்கு வருவார்.

காளி கோவிலில்...

விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு, கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் தொடங்கியது. படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னதாக, காளியம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தினார்கள். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள்.

0 comments:

Post a Comment