Thursday 6 February 2014

அமிதாப் பச்சனின் நினைவலைகள்....!!!




பழம்பெரும் இந்தி நட்சத்திரமான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் இந்தித் திரையுலகில் நடிகராக வலம் வருகின்றார். உலக அழகி ஐஸ்வர்யாராயைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆராத்யா என்ற சிறிய பெண் குழந்தையும் உண்டு.

 இவர் கடைசியாக நடித்து வெளிவந்துள்ள 'தூம்-3' உலகெங்கும் வெற்றிகரமாக ஓடி 500 கோடிக்கு மேல் வசூலித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இவர் அடுத்து ஷாருக்கான், தீபிகா படுகோனே. பொமன் இரானி ஆகியோருடன் இணைந்து பராகானின் 'ஹேப்பி நியூ இயர்' என்ற இந்திப் படத்தில் நடிக்க உள்ளார்.

இவர் நேற்று தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி 71 வயதான அமிதாபின் மனதில் பல நினைவுகளைத் தோற்றுவித்தது. தனது மகன் அபிஷேக் 38 வயதினை எட்டும் இந்த நேரத்தில் அவன் பிறந்த நேரம், அப்போது தாங்கள் நடந்துகொண்டது, சிறுவயதில் அவனது நடத்தை, வளர்ந்த விதம், அன்றிலிருந்து இன்று வரை அவனது வாழ்வில் நடந்த சுவையான சிறிய சம்பவங்கள் என்று அனைத்தும் தனது நினைவில் தோன்றியதாக அவர் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகன் வளர்ந்துள்ள இந்த நிலையில் அபிஷேக்கிற்கு தான் எப்போதுமே ஒரு சிறந்த தோழனாகவும், நண்பனாகவும், ஆதரவு அளிப்பவராகவும் நீடித்து இருப்பதே சிறப்பைத் தருவதாக இருக்கும் என்றும் அவர் கருதுவதாகக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment