Wednesday 26 February 2014

விலகிப்போன விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யாவும்..!



ஒரே நடிகரும் நடிகையும் ஒன்றிரண்டு படங்களில் சேர்ந்து நடித்துவிட்டாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் உலாவரத் தொடங்கிவிடுகின்றன.

அதைப் போலவே விஜய் சேதுபதிக்கும் அவருடன் ரம்மி மற்றும் பண்ணையாரு பத்மினி திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை ஐஸ்வர்யாவுக்கும் இடையே கிசுகிசுக்கள் உலாவரத் துவங்கியுள்ளன.

இதனை மேலும் வளர்த்து மீடியாவிற்குத் தீனி போட வேண்டாமென்று இருவரும் முடிவெடுத்துள்ளதைப் போல சமீபமாக நடைபெற்ற அலை அலையாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட இருவரும் விலகியே அமர்ந்திருந்தனராம். இனிமேலாவாது கிசுகிசுக்கள் வருவது குறையட்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தான் நடிக்கும் படங்களின் ஹீரோயினாக யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிக் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி, சமீபமாக தனது கேரக்டருக்கு ஹீரோயினே இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லையென்று சொன்னது நினைவு கூறத்தக்கது.

இப்படியான நடிகரின் மீது இதுபோன்ற கிசுகிசுக்கள் ஏற்பட்டுவருவது குறித்து பலரும் ஆச்சர்யப்படுகின்றனர்.

0 comments:

Post a Comment