Thursday 13 February 2014

வங்கித் துறையில் வெளியேறும் விகிதம் அதிகரிக்கும்..!


 தனியார் வங்கிகள் அதிக அளவில் வரத் தொடங்கினால் வங்கிப் பணியாளர்கள் பணியிலிருந்து வெளியேறும் விகிதம் அதிகரிக்கும் என்று தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் தனியார் வங்கிகள் அதிகம் தொடங்கப்பட்டால், பொதுத்துறை வங்கிகளிலிருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சேவைத்துறையைச் சேர்ந்த கெல்லி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு லைசென்ஸ் வழங்கப்பட்டால், வங்கித்துறையில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் 18 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment