Thursday 13 February 2014

மோடியின் 10 கட்டளைகள்..? அடி பணிந்தது அமெரிக்கா..!



மாநில முதல்வரை அமெரிக்க தூதர் சந்திப்பது சகஜம். தொழில் முதலீடு பற்றி பேசுவார்கள். மனித உரிமை, மத சுதந்திரம் பற்றியும் பேசலாம். மோடியை நான்சி பவல் நாளை சந்திக்கும்போது இதெல்லாம் பேசப்போவதில்லை. மாட்டேன், முடியாது என மோடி கூறிவிட்டார்.

குஜராத் கலவரத்தை ஒடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது மோடி மீதான ஒரு குற்றச்சாட்டு. அதன் பேரில் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது. அங்கு நிறைய குஜராத்திகள் இருந்தும் மோடியால் போக முடியாத நிலை. இது தனிப்பட்ட வகையில் அவருக்கு அவமானம்தான். இதற்கிடையில்தான் அமெரிக்காவை பழி தீர்த்துக் கொள்ளும் விதமாக நரேந்திர மோடி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை ஆமதாபாத் வரவழைத்து சந்தித்து பேசியிருக்கிறார்.

முன்னதாக மோடி போட்ட கட்டளைகள் என்னவென்று தெரியுமா?.

1.டெல்லியில் தூதரை சந்திக்க மாட்டேன். அவர்தான் என்னை சந்திக்க ஆமதாபாத் வர வேண்டும்.

2.என்னை சந்திக்க போவதாக மத்திய அரசிடம் தெரிவித்து அமெரிக்கா அனுமதி பெற வேண்டும்.

3.அதை ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

4.மாநில பிரச்னைகள் எதை பற்றியும் தூதர் என்னிடம் கேட்கக்கூடாது.

5.மத சுதந்திரம், கலவரம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பாக பேசக்கூடாது.

6.பிரதமர் ஆனதும் என்னென்ன செய்யப் போகிறேன் என்பதை கேட்கலாம்.

7.இந்தியாவுடன் உறவை பலப்படுக்திக் கொள்ள அமெரிக்கா என்னென்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்கலாம்.

8. கலவரத்தில் எனக்கு பங்கில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் கூறியிருப்பதை அமெரிக்கா வெளிப்படையாக எற்றுக் கொள்ளவேண்டும்.

9.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரான தலைவரை அவமதித்தது தவறு என்று அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்.

10. நூற்று முப்பது கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக எழுச்சி பெறும் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு பத்து கட்டளைகளை மோடி பிறப்பித்துள்ளதாக தூதரக வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சு ஓடுகிறது. அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட பிறகுதான் நாளைய சந்திப்புக்கு மோடி நேரம் கொடுத்தார் என்கிறார்கள்.

அமெரிக்காவை பின்பற்றி மோடியை பிளாக்-லிஸ்ட் செய்த இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் போன்றவை ஏற்கனவே சமரசம் செய்துகொண்டுவிட்டன.

0 comments:

Post a Comment