Thursday 13 March 2014

தமிழ் படத்தை இனிமேல் இயக்கமாட்டேன -- மணிரத்தனம் அதிரடி...!




தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம்.

இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார்.

 இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார்.

திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார்.

அதேபோல் தமிழுக்கும் நட்சத்திர தேர்வு நடத்த முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தமிழில் கடைசியாக அவர் இயக்கிய கடல் படம் படு தோல்வி அடைந்தது. இதனால் பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.

இப்போது அவரது அடுத்த தமிழ் படத்துக்கு பைனான்ஸ் செய்ய பலரும் யோசிக்கிறார்கள்.

இதனால் டோலிவுட்டுக்கு சென்று அந்த மொழியில் மட்டுமே இப்படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

அதே சமயம், ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதை அவரது மாமியார் ஜெயா பச்சன் விரும்பவில்லை.

மகள் ஆராத்யாவை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருப்பதால் நீண்ட கால்ஷீட் தருவது முடியாத காரியம் என ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மொழியில் மட்டும் மணிரத்னம் படம் இயக்குவதற்கு இதுதான் காரணம் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment