Sunday 9 March 2014

’அப்பாவே இப்படி பண்ணலாமா..?’ ஒரு நடிகையின் சோகக்கதை..!




’லவ் அட்டாக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிஷா. முதல் படத்திலேயே ஸ்ரீநிஷாவின் முழுத் திறமையும் வெளிப்பட்டதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.


நிறைய படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீநிஷா திடீரென மே மாதம் 20-ஆம் தேதி காணாமல் போய்விட்டார்.


கார் ஓட்டுனரான ஸ்ரீநிஷாவின் சித்தப்பா பதறிப்போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க போலிஸும் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீநிஷாவை ஒரு மாதமாக தேடிவந்தது.


படப்பிடிப்புத் தளத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு கிளம்பிய பிறகு காணாமல் போன ஸ்ரீநிஷா, ஒரு மாதத்திற்குப் பின் சில நாட்களுக்கு முன்பு ஒரு தெலுங்கு டி.வி சேனலில் தோன்றி திடுக்கிடும் பேட்டியளித்திருக்கிறார்.


பேட்டியில் வாடிய முகத்துடன் பேசிய ஸ்ரீநிஷா “ நான் தலைமறைவாக இருந்ததற்குக் காரணம் என் சித்தப்பா தான். பொருளாதார நெருக்கடியால் நானும், என் அம்மாவும் அவரைச் சார்ந்து இருக்க நேர்ந்தது.


என் அம்மா வீட்டில் இல்லாத சமயங்களில் என்னுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தார். வெளியே சொன்னால் எங்கள் இருவரையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அவருக்கு பயந்து தான் நான் தலைமறைவாக இருந்தேன்” என்று கூறியிருக்கிறாராம்.


எனவே போலிஸ் ஸ்ரீநிஷாவின் சித்தப்பா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் நடிகைகளுக்கு பிரச்சனை சித்தி, சித்தப்பா மூலம் வருவது தான் திரையுலகின் லேட்டஸ்ட் டிரெண்ட்.

0 comments:

Post a Comment