Monday 10 March 2014

மணப் பெண்ணாக போகும் பெண்களுக்கு, சில கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்..!




பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பராமரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பு என அவர்கள் மெனெக்கெடுவது அனைவரும் அறிந்ததே.

சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்களா? தன் திருமண நாளின் போது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தனித்துவத்துமான தோற்றத்துடன், நேர்த்தியான அழகுடன், அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஆசை எழுவது இயற்கை தான். அழகான தோற்றத்தை பெற தன் உடல் மற்றும் சரும பராமரிப்பின் மீது மட்டும் அவள் அக்கறை எடுத்துக் கொள்வது பத்தாது.

திருமணத்தின் போது தன் கூந்தல் பராமரிப்பிலும் மணப்பெண் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஈர்ப்புள்ள தோற்றத்தை பெற மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு கூந்தல் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். அதனை அடைய அழகு நிலையத்தை நாடி போக வேண்டும் என்ற அவசியமே இல்லை. மணப்பெண்ணாக போகும் பெண்களுக்காக சிகை அலங்கார வல்லுனர்கள் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளனர். அதனை பின்பற்றினால் மணப்பெண்ணின் சிகை அலங்காரம் அழகாவும், கவர்ச்சிகரமாகவும் அமையும்.

தலைமுடி பராமரிப்பை சீக்கிரமாகவே தொடங்குங்கள்: திருமண நாளின் போது கூந்தல் அழகாக காட்சி அளிக்க, மணப்பெண்ணாக போகும் பெண்கள் திருமண நாளிற்கு சில நாட்களுக்கு முன்பாகவே தயராக வேண்டும். முடிந்தால் சில மாதங்களுக்கு முன்பாகவே மணப்பெண்ணாக போகும் பெண்கள் தலைமுடி பராமரிப்பில் ஈடுபட தொடங்கி விடலாம். இது கடைசி நிமிஷ டென்ஷன் மற்றும் வலியை குறைக்கும். இதற்கு உதவி புரிந்திட சில தலைமுடி வல்லுனர்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம்.


தலைமுடியின் வாகை பொறுத்து அதற்கேற்ப பராமரிப்பில் ஈடுபடுங்கள்: மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு தலைமுடியை பராமரிப்பதில் எதிர்பார்த்த விளைவை பெற முதலில் அவர்களின் தலைமுடி வகையை அறிந்து கொள்வது அவசியம்.

உங்களுக்கு வறண்ட தலைமுடி என்றால் கண்டிப்பாக பொடுகு இருப்பதில் ஆச்சரியம் இருக்காது. அதனை நீக்க பொடுகை நீக்கும் பொருட்களை சந்தையிலிருந்து வாங்கி பயன்படுத்துங்கள். தலைக்கு குளித்த ஒரு நாளைக்கு பிறகு தலை முடியை சாதாரணமாக விட்டு விட சொல்லி மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு தலைமுடி வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படி செய்தால் தலைமுடி பளபளப்பாகவும் நல்ல தோற்றத்துடனும் நீண்ட காலம் நிலைக்கும்.

இயற்கையான தலைமுடி பராமரிப்பு வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள்: மணப்பெண் அழகாக காட்சி அளிக்கும் டிப்ஸ்களை பெற கூந்தல் அலங்காரத்துக்கு இயற்கையான வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள். அதற்கு இயற்கையான தலைமுடி பராமரிப்பு பொருட்களையே பயன்படுத்துங்கள்.

ரசாயனம் கலந்த பொருட்களை மணப்பெண்ணாக பெண்கள் பயன்படுத்தினால் அவை தீங்கை விளைவிக்கும். அது பொடுகு அல்லது முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கி விடும். இருப்பினும் மணப்பெண்ணாக போகும் பெண்கள் அழகிய கூந்தலை பெறுவதற்கு ஹேர் ட்ரையர், சிந்தடிக் நிரப்பூச்சுகள் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வகை பொருட்கள் கூந்தலின் வலிமையை குறைத்து விடும். தலைமுடியை கலரிங் செய்வதற்கு மருதாணியுடன் வடிசாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்டை பயன்படுத்துமாறு வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள். தலைமுடி பளபளவென காட்சி அளிக்க மாதம் ஒரு முறை தலை முடிக்கு முட்டையின் வெள்ளை கருவை பயப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சீரான முறையில் தலைமுடியை கழுவ வேண்டும்: மணப்பெண்ணாக போகும் பெண்கள் அழகிய கூந்தலை பெறுவதற்கு கொஞ்சம் ஷாம்பூ போட்டு தலை முடியை வாரம் மூன்று முறையாவது சீரான முறையில் கழுவ வேண்டும். மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு இது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிற அழகு குறிப்பாகும். அதற்கு காரணம் இது தலைமுடியை பலவகை சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தலை முடியை கழுவ புரதம் கலந்த கண்டிஷனரை பயன்படுத்தினால் அது ஸ்டைலான கூந்தலாக காட்சி அளிக்கும். திருமணத்திற்கு முன்பு கொஞ்ச நாளைக்கு சீரான முறையில் தலைமுடி மசாஜிலும் ஈடுபடலாம். இதுவும் மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு திருமணத்தின் போது அழகிய கூந்தலாக காட்சி அளிக்க உதவும். மணப்பெண்ணாக போகும் பெண்கள் மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றினால் அவர்களின் திருமணத்தில் சிறப்பாக காட்சி அளிப்பார்கள். அதனால் உங்கள் திருமணத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

0 comments:

Post a Comment