Friday 21 February 2014

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…!



சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்கேற்க உள்ளார்.

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… ஏ.ஆர்.ரஹ்மானின் "இன்ஃபினிட் லவ்" என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

அதற்கான நுழைவுச் சீட்டுகள் இப்போதே விற்கத் தொடங்கி விட்டன. ‘டிஎம்எல் லைப்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகனான இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை விருந்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடிய ஏ.ஆர். ரஹ்மான் மலேசிய, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடனும் உற்சாகத்துடன் உள்ளதாகக் கூறினார்.

 இந் நிகழ்ச்சி மலேசியாவில் ஏப்ரல் 26ம் தேதியும் சிங்கப்பூரில் ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.


0 comments:

Post a Comment