Friday 21 February 2014

30 ஆண்டுகளுக்குப் பிறகு... ஒரு உண்மைக் கதை..!



கிருஸ்தவ கொள்கை மற்றும் சிறப்புகளை மையப்படுத்தி ‘வில்லியனூர் மாதா’, குழந்தை ஏசு’, அன்னை வேளாங்கண்ணி’ என பல படங்கள் வெளிவந்திருந்தாலும், கடந்த 30 ஆண்டு காலமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற குறையை தீர்க்க வேளா எண்டர்பிரைசஸ் சார்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கடல் தந்த காவியம்’.

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள வடக்கண்குளத்தில் புகழ்பெற்ற பரலோக மாதா தேவாலம் இருக்கிறது. சரித்திரப்புகழ்பெற்ற இந்த மாதா கோவிலுக்கு, 200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கண்குளம் கடும் பஞ்சத்தில் தவித்தபோது, பெண் வடிவில் வந்த மாதா தன் கையால் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி மக்கள் தாகத்தை போக்கியதாக வரலாற்றுத் தகவல் உள்ளது. அந்த நீர் ஊற்று இன்றளவும் பயன்பாட்டில் உள்ளதாகவும், ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ஆம் தேதி சூரிய ஒளி மாதாவின் கால் முதல் தலை வரை பதிகிறதாம்.

மாதாவின் இப்படிப்பட்ட சிறப்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது கடல் தந்த காவியம் திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பரலோக மாதா தேவாலயத்தில் நடந்து, தற்போது பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. புனித வெள்ளியான ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தில் அப்ரஜித், அசுரதா ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment