Wednesday 5 March 2014

இலங்கை செல்ல என்னை வற்புறுத்தினார்கள் - சூப்பர் சிங்கர் திவாகர்...!




ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை.


இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.


நாம் தமிழர்கள்,  யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,  என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை,  தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என  சூப்பர்  சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.


நாம் தமிழர்களை என்றும் எதிர்த்ததில்லை நானும் தமிழருக்காகப் போராடுவேன் என இலங்கையில் ஏற்பாடாகியிருந்த சுப்பர் சிங்கர் இசைநிகழ்ச்சிக்காக கொழும்பு சென்று  தமிழ் உணர்வாளர்களின் தூண்டுதலினால் அந்நிகழ்ச்சி ரத்தாகி மீண்டும் சென்னை திரும்பிய சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் லங்காசிறி வானொலியின் செவ்வியில் தெரிவித்தார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் இலங்கையில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உலகத் தமிழர்கள் வை.கோ விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment